இணையம் மூலம் பல பெண்களை சீரழித்த வாலிபன்! மீண்டும் ஒரு காசி!

0
81
The young man who raped many women through the internet! A coin again!
The young man who raped many women through the internet! A coin again!

இணையம் மூலம் பல பெண்களை சீரழித்த வாலிபன்! மீண்டும் ஒரு காசி!

தற்போது உள்ள காலத்தில் நாம் பொழுதுபோக்குக்கு பயன்படுத்தும் மொபைல் போன்களே நமக்கு மிகப்பெரிய எதிரியாக உருவெடுத்து வருகிறது. அதன் மூலம் நாம் பல தொழில்நுட்பங்களை படன்படுதினாலும் பல வகையில் அது நமக்கு பாதகமாகவே அமைந்து விடிகிறது. வளரும் தலைமுறையினர் பலரும் இதன் மூலம் ஒரு புறம் சீரழிந்து வருகின்றனர்.

அப்படி ஒரு நயவஞ்சகன் தான் இணையம் மூலம் இளம் பெண்களுக்கு காதல் வலை வீசி அவர்களின் நிர்வாணமான புகைப்படங்களை வைத்துக்கொண்டு அவர்களையே மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த காமக்கொடூரன் கைது செய்யப்பட்டான். இவனிடம் 300க்கும் மேற்பட்ட பெண்கள் சீரழிந்து உள்ளதாக போலீசார் விவரம் தெரிவிக்கின்றனர். ஆந்திரா  மாநிலத்தில் கடப்பா மாவட்டம் ப்ரோதட்டூர் சென்னுப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசன்னகுமார் என்கின்ற ராஜா ரெட்டி.

28 வயதான இந்த நபர் பொறியியல் கல்லூரியில் படிக்கும் போது முதல் ஆண்டிலேயே படிப்பை நிறுத்தி விட்டான்.அதன் தன் செலவுக்காக வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளான். அதில் கிடைக்கும் பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ ஆரம்பித்துள்ளான். அதன் காரணமாக உல்லாச வாழ்க்கைக்கு பழகிய நிலையில் அதிகமாக திருடும் நிலைக்கு ஆளானார். 2017 ஆம் ஆண்டு திருட்டு வழக்கில் சிறைக்கு சென்ற பிரசன்னகுமார் விடுதலையானதும் மீண்டும் அதைப்  போல குற்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு உள்ளார்.

இந்நிலையில் கடந்த மாதம் 29 ஆம் தேதி போலீசார் அவனை மீண்டும் கைது செய்தனர். அப்போது அவனிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை கேட்டு போலீசாரே அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். இது குறித்து போலீஸார் கூறும்போது, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற வலைத்தளங்களின் மூலம் இளம் பெண்களிடம் நட்பை ஏற்படுத்தி பழகி வந்துள்ளார். அதன்பின் தன் நயவஞ்சகப் பேச்சால் அவர்களை காதல் வலையில் வீழ்த்தி பின்பு அவர்களது அந்தரங்க புகைப்படங்கள், நிர்வாண படங்களையும், வீடியோக்களையும், அனுப்பும்படி கேட்பாராம். மறுமுனையில் உள்ளோரும் கேட்பவர் காதலன் தானே என்ற நினைப்பில் அவன் கேட்கும் விதத்தில் படங்களை எடுத்து அனுப்பியுள்ளன.

அதன் பின்பு அவர்களிடம் அவர்களது புகைப்படங்களை வைத்தே பணம், நகை என மிரட்டி கேட்டுள்ளான். அவ்வாறு தராத பட்சத்தில் நிர்வாண படங்களை எல்லாம் சமூக ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி பணம் நகைகளை பறித்து உள்ளான். இதனால் பயந்து போன பெண்கள் அவன் கேட்கும் போதெல்லாம் நகை மற்றும் பணத்தை கொடுத்துள்ளனர். மேலும் சில பெண்களை பாலியல் பலாத்காரத்திற்கும் பயன்படுத்தியுள்ளான் என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

இதுவரை பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் முன்வந்து புகார் அளிக்காததால் இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இந்த செயலில் அவன் தொடர்ந்து ஈடுபட்டு உள்ளான். அதன்படி விஜயவாடா, ஐதராபாத் உள்ளிட்ட பல நகரங்களில் உள்ள 300க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் மற்றும் திருமணமான நடுத்தர வயது பெண்கள் ஆகியோரும் இவரது காதல் வலையில் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். இதையடுத்து போலீசார் அவரது செல்போனை ஆய்வு செய்தனர்.

அப்போது போலீசாரை அதிர்ச்சி அடையும் வகையில் ஏராளமான அளவில் குழந்தைகள் மற்றும் பெண்களின் நிர்வாண படங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரது செல்போனை பறிமுதல் செய்தனர். மேலும் அவனை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சமூக வலைத்தளங்களில் பெண்கள் தங்களின் போட்டோக்களை அல்லது குடும்பத்தில் உள்ளவர்கள் போட்டோக்களை பதிவிட கூடாது. அவ்வாறு பதிவிட்டால் இதுபோன்ற அவலங்களில் தள்ளப்படுவார்கள் என்று போலீசார் பெண்களுக்கு அறிவுரையும் கூறியுள்ளனர்.