ஆசைக்கு இணங்காததால் மூதாட்டிய கொன்ற வாலிபர்!

0
76
The young man who killed his grandmother for not complying with desire!
The young man who killed his grandmother for not complying with desire!

ஆசைக்கு இணங்காததால் மூதாட்டிய கொன்ற வாலிபர்!

இக்கால கட்டத்தில் குற்றங்கள் பலவகையில் நடந்துவருகின்றன.அதில் இப்பொழுது பெருமளவில் அதிகரித்து வரும் பாலியல் தொல்லைகளால் பெண்கள் நடமாடவே அச்சமாக உள்ளது.அந்நிலையில் சென்னை திருவொற்றியூரில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 68 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் ரத்த காயங்களுடன் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் வயதான மூதாட்டியை ஸ்டாலின் மருத்துவமனையில் சேர்த்தனர்.சிகிச்சை பெற்றுவந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் இறந்த மூதாட்டி திருவெற்றியூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணவேணி என்பது தெரிய வந்தது.இவர் ஒருவாரம் முன் இரவு நேரத்தில் வெளியே சென்றபோது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி காயமடைந்துள்ளர் என்பது தெரியவந்தது.

இதுக்குறித்து போலீசார் விசாரித்த போது சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் சரியாக காட்சிகள் பாதிவாக காரணத்தினால் எந்தவித துப்பும் கிடைக்கவில்லை.ஆகையால் இந்த வழக்கு குற்றவியல் பிரிவு ஆய்வாளர் புவனேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைத்து கொலையாளியை தேடி வந்தனர்.அதன்பின் வேறுஒரு இடத்தில இருந்த சிசிடிவி கேமராவில் கொலை நடந்த அன்று ஒரு நபர் வேகமாக சென்று ஒரு கண்டைனர் லாரியில் ஏறியது தெரியவந்தது.இதுக்குறித்து விசாரித்த தனிப்படை குழு எண்ணூர் என்னும் ஊரை சென்றடைந்தது.விரைவாக விசாரித்த போலீசார்,கொலையாளியை கண்டுபிடித்தனர்.அவர் சத்யமூர்த்தி பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் என்பது தெரியவந்தது.அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பலவித திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்தது.அதில் அவர் கூறியது,கொலை நடந்த அன்று அவர் மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் மதுபான கடையில் மது அருத்திவிட்டு அங்குவந்த கிருஷ்ணவேணி மூதாட்டியை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறி உடலுறவுக்கு அழைத்ததாக கூறப்படுகிறது.

அவர் ஆசைக்கு இணங்காத மூதாட்டி தப்பி செல்ல முயன்றுள்ளார்.அவர் தப்பி சென்றால் நம்மை காட்டிக்கொடுத்து விடுவார் என்று யோசித்த ஜெயக்குமார் அவரை அருகில் இருக்கும் கட்டையால் தாக்கியுள்ளார்.உயிர் பிழைத்தால் நாம் மாட்டிக்கொள்வோம் என்று எண்ணத்தில் மேலும் கல்லை மூதாட்டியின் மீது போட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இக்காலகட்டத்தில் ஒரு வயது குழந்தை முதல் அறுவது வயது மூதாட்டி வரை இம்மாறியான அரக்கர்கள் விட்டு வைப்பது இல்லை என்பது வருத்ததிற்குள்ளானது.