இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் என கதறி அழுத மாணவி! மாணவி முதல் குடும்ப பெண்கள் வரை உல்லாசம்!

0
102

இன்ஸ்டாகிராம் மூலமாக மாணவிகள் முதல் குடும்ப பெண்கள் வரை தனது வலையில் விழ வைத்து அவர்களுடன் உல்லாசம் அனுபவித்து அதை வீடியோ பதிவு செய்து அவர்களை மிரட்டி மறுபடியும் உல்லாசம் அனுபவிப்பதற்காக 20 வயது பொறியியல் மாணவன் செய்த காரியம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் இன்ஸ்டாகிராமில் 20 வயது பொறியியல் மாணவணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் பேசி பழகி உடலுறவு வரை சென்றுள்ளனர். இருவர்கள் தனிமையில் இருக்கும் பொழுது அந்த மாணவன் அதை வீடியோ பதிவு செய்திருக்கிறான். அதை காமித்து ஒவ்வொரு முறையும் உல்லாசம் அனுபவித்திருக்கிறான் .

அப்படி ஒரு நாள் அந்த பெண்ணின் வீட்டிற்கு வரவே தனிமையில் இருந்த நிலையில் இந்த மாணவியின் தாயார் ஒரு ஆசிரியர் விஜயதசமி என்பதால் பள்ளியிலிருந்து சீக்கிரமாக வீட்டிற்கு வந்துள்ளார். அழைப்பு மணி அடிக்கவே பதறிப் போய் கதவை திறந்துள்ளார். மாணவியின் முகம் பயந்து போய் இருந்ததால் மாணவியிடம் தாய் என்ன நடந்தது என்று கேட்டுள்ளார்.

மாணவி பயந்து கொண்டே கதவின் அருகே கை காட்டி உள்ளார். கதவே சென்று தட்டிய பொழுது உள்பக்கம் தாழ்ப்பாள் போட்டு இருந்துள்ளது. என்ன நடந்தது என்று கேட்கவே நடந்ததை விவரமாக சொல்லியுள்ளார். இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டு தனிமையில் இருந்து அதை வீடியோ பதிவு செய்து மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்துள்ளான் என அந்த மாணவி தாயிடம் சொல்லியுள்ளார்.உடனே தாய் கூச்சலிட்டு அக்கம்பக்கம் இருந்தவர்களை அழைத்து அவனை பிடித்து போலீசிடம் ஒப்படைத்து உள்ளார்.

போலீசாரின் விசாரணையில், விருத்தாசலம் அருகே பெரியவடவாடி கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார் வயது 20 என்பது தெரியவந்தது. மேலும் அவன் இன்ஸ்டாகிராம் மூலமாக மாணவிகள் மற்றும் குடும்ப பெண்களை காதல் வலையில் விழ வைத்து அவர்களுடன் உல்லாசம் அனுபவித்து அதை வீடியோ பதிவு செய்து அவர்களிடம் காண்பித்து அவர்களை மிரட்டி மீண்டும் மீண்டும் உல்லாசம் அனுபவித்து தெரியவந்தது.போலீசார் அவனை போஸ்கோ சட்டத்தின்கீழ் ஜெயக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

author avatar
Kowsalya