திருமணத்திற்கு பொருட்கள் வாங்கி திரும்பும்போது பேருந்தில் நிலைதடுமாறிய பெண்! உருண்டு நடு ரோட்டில் விழுந்த சிசிடிவி காட்சிகள்!

0
103

திருமணத்திற்கு பொருட்கள் வாங்கி திரும்பும்போது பேருந்தில் நிலைதடுமாறிய பெண்! உருண்டு நடு ரோட்டில் விழுந்த சிசிடிவி காட்சிகள்!

நேற்று தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடத்தில் இருந்து கழுகுமலைக்கு தனியார் மினி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அதில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் பேருந்திலிருந்து இறங்குவதற்காக எழுந்த போது நிலைதடுமாறி ஓடிக்கொண்டிருந்த பேருந்தின் முன்பக்க படி வழியாகவே சாலையில் விழுந்து விட்டார்.

தென்காசி மாவட்டம் குருவிகுளம் அருகே உள்ள ராமலிங்கபுரம் தீப்பெட்டி அலுவலகத்திற்கு பின்புறமுள்ள காலனியை சேர்ந்தவர் மகேஸ்வரி இவர் இன்று தனது மகளின் திருமணத்துக்காக கழுகுமலையில் இருந்து பொருட்களை வாங்கிக் கொண்டு தனியார் சிற்றுந்து மூலம் சொந்த ஊருக்கு பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் இறங்கவேண்டிய பேருந்து நிறுத்தம் வந்ததை அடுத்து அவர் கீழே இறங்க முயற்சி செய்து எழுந்து நின்றார். அப்போது நிலை தடுமாறி முன்பக்க படிக்கட்டின் வழியாக உருண்டு கீழே விழுந்துவிட்டார். அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அவர் விழுந்தது சக பயணிகள் அனைவருக்கும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.எனவே அந்த வாகனத்தை நிறுத்தி பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண்ணை, சக பயணிகளும், ஓட்டுனரும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குருவிகுளம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து அதன் பின் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார். இந்த காட்சிகள் சிற்றுந்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன.

அது தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இது குறித்து குருவிகுளம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.