கண்ணிமைக்கும் நொடியில் பெண் உயிரிழப்பு! சோகத்தில் அப்பகுதி மக்கள்!

கண்ணிமைக்கும் நொடியில் பெண் உயிரிழப்பு! சோகத்தில் அப்பகுதி மக்கள்!

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ரகுநாதன். இவர் டி என் பி எல் என்ற நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.இவருடைய மனைவி திவ்யபாரதி. இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று காலை திவ்யபாரதி வழக்கம் போல் அவரின்  வீட்டின்   அருகில் உள்ள பைபிள் குடிநீர் எடுத்து வருவதற்காக சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக பாம்பு ஒன்று திவ்யபாரதியை கடித்து விட்டது. அந்த பாம்பானது அவ்விடத்தில்லிருந்து சென்று மறைந்து விட்டது. அதனையடுத்து திவ்யபாரதி அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அந்த  சிகிச்சை பலன் அளிக்கவில்லை என மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment