கணவன் வீட்டுக்கு சென்ற மனைவி மாயமானார்! நடந்தது என்ன?

0
90
The wife went to her husband's house and disappeared! what happened?
The wife went to her husband's house and disappeared! what happened?

கணவன் வீட்டுக்கு சென்ற மனைவி மாயமானார்! நடந்தது என்ன?

சேலம் மாவட்டம் வீரகனூர் சந்தப்பேட்டை பகுதி சேர்ந்தவர் தான் ராமதாஸ். இவரது மகள் பிரியங்கா வயது 19. கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சராபாளையம் வடக்கேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் இளவரசன்.

பிரியங்கா மற்றும் இளவரசன் இருவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஒன்பதாம் தேதி இளவரசன் தனது மனைவியை மாமனார் ஊரான வீரகனூருக்கு அழைத்துச் சென்றார்.

பிறகு மனைவி பிரியங்காவை இரண்டு நாட்களுக்கு பெற்றோருடன் இருந்து வருமாறு கூறினார். மனைவி பிரியங்காவும் சரி என்றார். இதைக் கூறிய இளவரசன் தனது சொந்த ஊரான கச்சராபாளையத்திற்கு தனியாக சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் கணவர் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு மனைவி பிரியங்கா வீட்டை விட்டு கிளம்பியுள்ளார்.

வெகு நேரம் ஆகியும் கணவர் வீட்டுக்குச் சென்ற மகள் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவில்லை. இதனால் அச்சமுற்ற பிரியங்காவின் பெற்றோர் போன் செய்தார்கள். ஆனால் பிரியங்கா தொலைபேசியில் தொடர்பு கொள்ளவில்லை.

பிறகு பிரியங்காவின் கணவரான மருமகனுக்கு போன் செய்தனர். தனது பிள்ளை பிரியங்கா வீட்டிற்கு வந்து விட்டாரா என்று கேட்டனர். இல்லை வரவில்லை?என்று பிரியங்கா கணவர் இளவரசன் கூறியுள்ளார். பிறகு சில இடங்களில் தனது இரு சக்கர வாகனத்தில் பிரியங்காவை தேடிவுள்ளார்.

எங்கும் கிடைக்காததால் இளவரசன் வீரகனூர் காவல் நிலையத்தில் தனது மனைவியை காணவில்லை என்று புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து புகாரின் அடிப்படையில் போலீசார் பிரியங்காவை தீவிரமாக தேடி வருகின்றனர்

author avatar
Parthipan K