மீண்டும் இந்திய குடியுரிமையை பெற்று விட்டார் ரஜினி படத்தின் வில்லன்!

0
33

மீண்டும் இந்திய குடியுரிமையை பெற்று விட்டார் ரஜினி படத்தின் வில்லன்!

 

சுதந்திர தின நாளில் தான் இந்திய குடியுரிமையை பெற்று விட்டதாக பாலிவுட்டின் முன்னனி நடிகர்களில் ஒருவரான அக்ஷய் குமார் அறிவித்துள்ளார்.

 

இந்திய திரையுலகில் அதிக சம்பளம் பெரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அக்ஷய் குமார்.இவர் 30 ஆண்டுகளுக்கும் மேல் திரையுலகில் பணியாற்றி வருகிறார்.இவர் நாட்டு பற்று தொடர்பான படங்களில் நடித்து ரசிகர்களை தன் வசம் ஈர்த்தார்.மேலும் தமிழில் ‘2.0’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.இந்நிலையில் கனடா நாட்டின் குடியுரிமையை பெற்று விட்டு இந்திய தேசப்பற்று படங்களில் நடிக்கிறார் என்று இவர் மீது விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருந்தன.இதனை தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு மீண்டும் இந்திய குடியுரிமை பெறுவதற்காக இவர் விண்ணப்பித்து இருந்தார்.ஆனால் கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணத்தினால் பாஸ்போர்ட் கிடைப்பதில் கால தாமதம் ஆகின்றது என தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் தனக்கு மீண்டும் இந்திய குடியுரிமை கிடைத்து விட்டதாக நாட்டின் 77 வது சுதந்திர தின நாளான இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.மேலும் அவர் மூவர்ண கொடியை பிடித்தபடி நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.இதனை தொடர்ந்து அவரின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.