நாமக்கல்லில் அமையும் சிப்காட்!!  ஆஞ்சநேயருக்கு பால்குடம் எடுத்து கிராம மக்கள் எதிர்ப்பு!!

0
153
#image_title

நாமக்கல்லில் அமையும் சிப்காட்!!  ஆஞ்சநேயருக்கு பால்குடம் எடுத்து கிராம மக்கள் எதிர்ப்பு!!

நாமக்கல் அடுத்த வளையப்பட்டி, பரளி, என்.புதுப்பட்டி ஊராட்சி பகுதியில் தமிழ்நாடு அரசின் தொழில் துறை மூலம் சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் அமைய இருக்கிறது. இதற்கான நிலம் கையகப்படுத்துவதற்காக மோகனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வளையப்பட்டி, பரளி, அரூர், புதுப்பட்டி, லத்துவாடி, உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகள் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

நிலம் கையகப்படுத்தப்பட்டால் ஏராளமான விவசாய நிலங்களும் விவசாயமும் பாதிக்கப்படும் என கூறி அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதில் பொது மக்களின் கருத்துக்களை கேட்காமல் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்பட்டு வருவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் தலையிட்டு சிப்காட் அமைப்பதை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வளையப்பட்டி, புதுப்பட்டி, பரளி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், பெண்கள் என சுமார் 100 க்கும் மேற்பட்டோர் வளையப்பட்டியில் பால்குடம் எடுத்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

மேலும் பால் குடத்துடன் வளையப்பட்டி பகுதியில் ஊர்வலமாக சென்று பின்னர் நாமக்கல்லில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோவிலை வந்தடைந்தனர். பின்னர் தாங்கள் கொண்டு வந்த பாலை ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

author avatar
Savitha