காதலி திருமணத்திற்கு சம்மதிக்காததால் நடு ரோட்டில் கொலை செய்த கொடூரன்! அதுவும் கழுத்தை அறுத்து வெறித்தனம்!

0
184
The tyrant who killed in the middle of the road because his girlfriend did not consent to the marriage! That too is beheading frenzy!
The tyrant who killed in the middle of the road because his girlfriend did not consent to the marriage! That too is beheading frenzy!

காதலி திருமணத்திற்கு சம்மதிக்காததால் நடு ரோட்டில் கொலை செய்த கொடூரன்! அதுவும் கழுத்தை அறுத்து வெறித்தனம்!

பெங்களூரு கெங்கேரி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த 23 வயதுடைய இளம் பெண் அனிதா. இவர் சொந்த ஊர் ஆந்திர மாநிலம். ஆனால் பெங்களூரில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் வெங்கடேஷ் என்ற 27 வயது நபரும் வேலை செய்து வருகிறார். ஒரே நிறுவனத்தில் இரண்டு பேரும் வேலை செய்ததன் காரணமாக அவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். கடந்த இரண்டு வருடங்களாக அவர்கள் காதலித்துள்ளனர்.

மேலும் அங்கே ஒரு வீட்டின் முதல் மாடியில் அனிதாவும், இரண்டாவது மாடியில் அந்த வெங்கடேஷும் தனியாக நண்பர்களுடன் தங்கி உள்ளனர். இந்நிலையில் அனிதா வெங்கடேஷை பற்றி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அனிதாவின் பெற்றோர் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டனர். அதனைத் தொடர்ந்து அனிதாவிற்கு வேறு இடத்தில மாப்பிள்ளையும் பார்க்க ஆரம்பித்து உள்ளனர். எனவே வெங்கடேஷிடம் அனிதா இதுபற்றி தெரிவித்துவிட்டு, பெற்றோர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததன் காரணமாக, நீங்களும் வேறு பெண்ணை பார்த்து திருமணம் செய்து கொள்ளும்படி கூறியுள்ளார்.

இந்த விவகாரம் காரணமாக அனிதாவிற்கு வேங்கடேஷிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொள்ளலாம் என வெங்கடேஷ் கூறி வந்துள்ளார். ஆனால் அனிதா பெற்றோருக்கு மீறி திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. இதன் காரணமாக ஆத்திரமடைந்த அந்த நபர் நேற்று காலை வீட்டில் இருந்து அனிதா வேலைக்கு செல்லும் போது அவரை பின்தொடர்ந்து சென்று அதன் பின் மெயின் ரோடு அருகே வந்தபோது, அனிதாவின் கழுத்தை கத்தியால் அறுத்து விட்டு அங்கிருந்து அந்த நபர் ஓடிவிட்டான்.

இதில் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அனிதாவை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டார். இதுபற்றி தகவல் அறிந்த சிங்கேரி போலீசார் சம்பவ இடத்திற்கு தனியார் மருத்துவமனைக்கும் விரைந்து சென்று அனிதாவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சஞ்ஜீவ் பாட்டிலும் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

அப்போதுதான் அனிதாவும் வெங்கடேஷும் காதலித்த விஷயங்கள் அவர்களுக்கு தெரியவந்தது. திருமணத்திற்கு மறுத்ததன் காரணமாக ஒரு புது கத்தி வாங்கி அதனை பயன்படுத்தி அனிதாவை கொண்றதும் அவர்கள் விசாரணையில் தெரிந்து கொண்டனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருந்த வெங்கடேஷும் கைது செய்யப் பட்டார். அவரிடம் மேலும் இது தொடர்ந்து விசாரணை செய்யப் படுகிறது. பட்டப்பகலில் நடுரோட்டில் வைத்து நடந்த இந்த கொலை சம்பவம் அந்த இடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.