குடும்ப பிரச்சினைக் காரணமாக தாயும் சேயும் எடுத்த விபரீத முடிவு!

0
70

குடும்ப பிரச்சினைக் காரணமாக தாயும் சேயும் எடுத்த விபரீத முடிவு!

விழுப்புரத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக,தாயும் சேயும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் ஆனந்புரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் கன்னியப்பன் புஷ்பா தம்பதி.இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார்.கன்னியப்பன் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால்,கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என்று அக்கம் பக்கத்தினரால் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று கன்னியப்பன் மது அருந்துவிட்டு வீட்டிற்கு சென்று புஷ்பாவிடம் சண்டை போட்டு அவரை அடித்ததாக கூறப்படுகிறது.இதனால் கணவன் மீது ஆத்திரம் அடைந்த புஷ்பா தனது நான்கு வயது மகனுடன் நேற்று இரவு வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
மதுபோதையில் இருந்த கன்னியப்பனுக்கு மனைவியும் குழந்தையும் வீட்டை விட்டு வெளியேறுவது கூட தெரியவில்லை.மறுநாள் காலையில் போதை தெளிந்தவுடன் மனைவி மற்றும் குழந்தையை தேடியபோது,கண்ணியப்பனின் மனைவி புஷ்பாவும் அவருடைய நான்கு வயது குழந்தையும் கிணற்றில் இறந்து மிதந்து கிடப்பதாக கண்ணப்பனுக்கு தகவல் கிடைத்தன.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் புஷ்பா மற்றும் அவருடைய குழந்தையின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
Pavithra