2 வயது மகனுடன் கர்ப்பிணித்தாய் எடுத்த விபரீத முடிவு!

0
64

2 வயது மகனுடன் கர்ப்பிணித்தாய் எடுத்த விபரீத முடிவு!

திருச்சி அருகே குடும்ப பிரச்சினை காரணமாக கர்ப்பிணி பெண் தனது 2 வயது மகனுடன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் கோட்டப்பாளையம் களர்மேடு பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் என்பவர்,இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகின்றார்.இவருடைய மனைவி ரஞ்சனா. இவர்களுக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகும் நிலையில் இவர்களுக்கு 2 வயதில் கமலேஷ் என்ற மகனும்,ரஞ்சனா 2மாத கர்ப்பமாகவும் உள்ளார்.வேல்முருகனின் பெற்றோர் வீட்டில் கூட்டுக் குடும்பமாக இவர்கள் வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் பணியின் காரணமாக வேல்முருகன் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி கிருஷ்ணகிரிக்கு சென்றுள்ளார்.அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டதாக தகவல்கள் கூறப்படுகின்றது.இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான ரஞ்சனா நேற்று காலை தனது 2 வயது மகனுடன் குளியலறைக்கு சென்று மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டனர்.அவர்களின் அலறல் சத்தத்தை கேட்டு,அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு,துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆனால் திருச்சி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இரண்டு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.மேலும் ரஞ்சனா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதுகுறித்து முசிறி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
Pavithra