பெண்ணிற்காக நியாயம் கேட்ட இளைஞரை நடுரோட்டில் அடித்த போக்குவரத்து காவலர்! சைலேந்திரபாபு எடுத்த அதிரடி நடவடிக்கை!

0
104

கோவை மாவட்டத்திலுள்ள நீலாம்பூர் பகுதியில் மோகன சுந்தரம் என்பவர் வசித்து வருகின்றார். இவர் ஸ்விகி நிறுவனத்தில் பகுதி நேரமாக வேலை பார்த்து வருகிறார். இவர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு பள்ளி வாகனம் ஒரு பெண்ணின் மீது இடித்து விட்டு நிற்காமல் சென்றிருக்கிறது.

இதை கவனித்த மோகனசுந்தரம் பள்ளி வாகனத்தை நிறுத்தி பெண்ணின் மீது இடித்தது குறித்து நியாயம் கேட்டிருக்கிறார்.

இதை கவனித்த ஒரு போக்குவரத்துக் காவலர் மோகன சுந்தரத்தை சரமாரியாக தாக்கி இருக்கிறார் அந்த போக்குவரத்துக் காவலர் மோகனசுந்தரி தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது இதனால் போக்குவரத்துக் காவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவினடிப்படையில் போக்குவரத்து காவலர் கைது செய்து தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், மோகன சுந்தரத்திடம் காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு நலம் விசாரித்திருக்கிறார்.

அதன்பிறகு டிஜிபி போக்குவரத்து காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோகனசுந்தரத்திடம் கூறியிருக்கிறார். இதனால் டிஜிபி சைலேந்திரபாபுவை பலரும் பாராட்டி வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

அதோடு மோகனசுந்தரம் பள்ளி வாகனத்தை நிறுத்தி பெண்ணின் மீது இடித்தது குறித்து நியாயம் கேட்டபோது போக்குவரத்து காவலர் அந்த பள்ளி வாகனம் யாருடையது தெரியுமா? என்று மோகனசுந்தரத்திடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அதன்பிறகு மோகன சுந்தரத்தின் கைபேசியை வாங்கி வைத்துவிட்டு சிறிது நேரம் கழித்து தன்னுடைய செல்போனை கொடுத்து அங்கிருந்து அனுப்பி வைத்ததாக மோகனசுந்தரம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.