விவசாயியை தாக்கிய வாலிபர்!  போலீசார் விசாரணை!

0
87
The teenager who attacked the farmer! Police investigation!
The teenager who attacked the farmer! Police investigation!

விவசாயியை தாக்கிய வாலிபர்!  போலீசார் விசாரணை!

நாமக்கல்  மாவட்டம் கந்தம்பாளையம் அருகே உள்ள நடந்தை சாலபாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி (48). இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவருக்கு ஒரு  தங்கை இருக்கின்றார். தங்கையின் மகள் கிருத்திகாவுக்கும் குன்னமலை சிக்கி நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பழனியப்பன் மகன் சதீஷ்குமார் (29) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

மேலும் கிருத்திகாவுக்கும் சதீஷ்குமாருக்கும் 9 ஆண்டுகளாக குழந்தைகள் இல்லை. அதனால் கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு தகராறு அவ்வப்போது வந்து செல்லும். ஒரு நாள் அதேபோல் தகராறு ஏற்பட்ட போது சதீஷ்குமார் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதாக  கிருத்திகாவிடம் கூறினார். சதீஷ்குமார் கூறியதை கிருத்திகா தனது மாமா முத்துசாமியிடம் கூறி அழுதார்.

மேலும் சதீஷ்குமார் ஒரு நாள் முத்துசாமி வீட்டிற்கு வந்தார். சதீஷ்குமார் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதை தெரிந்து கொண்ட முத்துசாமி சதீஷ்குமாரை கண்டித்தார். அவர் எனது குடும்ப பிரச்சினை குறித்து பேச நீ யாரு என கூறி தகாத வார்த்தைகளால் திட்டினார். மேலும் கோபமடைந்து அங்கிருந்த இரும்பு கம்பியால் முத்துசாமியை சதீஷ்குமார் தாக்கினார். மேலும் முத்துசாமியும் ஆத்திரமடைந்து சதீஷ்குமாரை தாக்கினார்.

மேலும் இந்த தகராறு பலத்த காயமடைந்த முத்துசாமி கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மேலும் சதீஷ்குமாருக்கும் காயம் ஏற்பட்டதால் அவர் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவளின் பெயரில் போலீசார் இரண்டு பேரும் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
Parthipan K