ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்னும் சிறிது நேரங்களில் வெளியாக உள்ளது ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் டீசர்!

0
64

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்னும் சிறிது நேரங்களில் வெளியாக உள்ளது ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் டீசர்!

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’. சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசை அமைப்பாளர் டி.இமான் இசை அமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் நாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

‘ஜெய் பீம்’ படத்தின் பெரும் வெற்றியை தொடர்ந்து, சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி உள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் வருகிற மார்ச் மாதம் 10ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, படத்திற்கான இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.

சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘சூரரை போற்று’ மற்றும் ‘ஜெய் பீம்’ ஆகிய திரைப்படங்கள் நேரடியாக ஓ.டி.டி தளத்தில் வெளியான நிலையில், தற்போது சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை திரையரங்குகளில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே, வெளியான நிலையில், படத்தின் டீசர் குறித்த அறிவிப்பை நேற்று முன்தினம் படக்குழு வெளியிட்டிருந்தது. அதில், ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் டீசர் இன்று (பிப்ரவரி 18-ந் தேதி) மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் டீசர் இன்னும் சிறிது நேரங்களில் வெளியாக உள்ளது.

author avatar
Parthipan K