நடுரோட்டில் ஐட்டம் பாட்டுக்கு மாணவர்களுடன் குத்தாட்டம் போட்ட ஆசிரியர்! வைரலாகும் வீடியோ!

0
161
The teacher who punched students for item song in the middle of the road! Viral video!
The teacher who punched students for item song in the middle of the road! Viral video!

நடுரோட்டில் ஐட்டம் பாட்டுக்கு மாணவர்களுடன் குத்தாட்டம் போட்ட ஆசிரியர்! வைரலாகும் வீடியோ!

மாணவர்கள் தான் விதிமுறைகளுக்கு மாறாக தற்பொழுது நடந்து கொள்கிறார்கள் என்றால், தற்போதைய ஆசிரியர்களும் அப்படித்தான் உள்ளனர். மாணவர்களுக்கு ஒழுக்கம் படிப்பு கற்று தர வேண்டிய ஆசிரியர்களே அதனை பின்பற்றுவது இல்லை.படிக்க வரும் மாணவர்களிடமே பாலியல் சீண்டலில் ஈடுபடுகின்றனர்.அதுசம்மதமாக தற்சமயத்தில் பல வழக்குகளை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் நாகர்கோவில் தனியார் பள்ளி ஒன்றின் ஆசிரியர் மாணவர்களுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட வீடியோ பெற்றோர் மற்றும் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவிலில் சேர்ந்த தனியார் பள்ளி ஒன்று, போட்டிக்காக மதுரைக்கு சென்றுள்ளது. போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களை வழிநடத்தி செல்லும் ஆசிரியர், போட்டி முடிந்ததும் நடுரோட்டில் மஸ்காரா மற்றும் ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே சுகம் சுகம் என்ற பாடலை போட்டு குத்தாட்டம் போட்டுள்ளனர்.

மாணவர்களும் நடு ரோட்டில் ஆசிரியர் உடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டு அதனை வீடியோவாக எடுத்தும் வெளியிட்டுள்ளனர். தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மாணவர்களுக்கு அறிவுரை கூறி வழிகாட்டி கூட்டிக் கொண்டு வர வேண்டிய ஆசிரியரே இவ்வாறு மாணவர்களுடன் சேர்ந்து குத்தாட்டம் போடலாமா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அது மட்டும் இன்றி இந்த வீடியோவை பார்த்த அப்பள்ளியை சேர்ந்த பெற்றோர்கள் மற்றும் பள்ளியின் அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.