இந்தி பாடத்தில் தோல்வி மாணவனை அடித்து கொன்ற ஆசிரியர்! பரபரப்பு சம்பவம்!

0
97
the-teacher-killed-the-student-who-failed-in-hindi-sensational-incident
the-teacher-killed-the-student-who-failed-in-hindi-sensational-incident

இந்தி பாடத்தில் தோல்வி மாணவனை அடித்து கொன்ற ஆசிரியர்! பரபரப்பு சம்பவம்!

உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவை அடுத்துள்ள பாடல்பூர் என்ற பகுதியை சேர்ந்த 12வயது சிறுவன் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகின்றார்.அவருடைய வகுப்பு ஆசிரியராக இருத்தவர் ஷோபரன்.இந்நிலையில் அந்த பள்ளியில் அண்மையில் தேர்வு ஓன்று நடந்தது.

அந்த தேர்வில் இந்தி பாடமும் இடம்பெற்றிருந்தது. ஆனால் அந்த மாணவன் இந்தி தேர்வில் தோல்வியுற்றார் இதனால் அந்த மாணவனை ஆசிரியர் கண்டிப்பதற்காக பிரம்பால் தாக்கியுள்ளார்.மேலும் அந்த ஆசிரியர் மாணவனை கடுமையாக தாக்கியதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தார்.

இந்நிலையில் மயக்கமடைந்த சிறுவனை சக ஆசிரியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு அவரை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.சிறுவன் படுகாயம் அடைந்ததாக கூறப்பட்டது.அதனால் சிறுவனின் உறவினர்கள் மற்றும் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்தனர் அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் மாணவனை தாக்கிய ஆசிரியர் தான் மாணவனுக்கு உதவி செய்து வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகின்றது.

மேலும் மாணவரின் குடுபத்திற்கு அந்த ஆசிரியர் பண உதவி செய்துள்ளார்.இந்நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மாணவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மாணவன் இறந்த செய்தியை அறிந்த ஆசிரியர் தலைமறைவானார்.

அதனையடுத்து தலைமறைவானவரை தீவிரமாக தேடி வந்தநிலையில் தாத்ரி பைபாஸ் அருகே வைத்து கைது செய்தனர்.மேலும் மாணவனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.அந்த அறிக்கையில் ஆசிரியர் அடித்ததில் மாணவனின் மூளையில் ரத்தம் உறைந்திருப்பதாகவும் ,நரம்பின் சிதைவு காரணமாக உயிரிழந்திருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.

author avatar
Parthipan K