சம்பள உயர்வு கொடுக்காத முதலாளிக்கு தொழிலாளி செய்த அதிர்ச்சியான காரியம்!

0
58

தொழிலாளி ஒருவர், சம்பளத்தில் தனக்கு போதுமான அளவு ஊதிய உயர்வு கொடுக்காததால், முதலாளியின் பணத்தை கொள்ளையடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் பரிதாபாத்தில் கட்டுமான நிறுவனம் ஒன்றை முதலாளி ஒருவர் நடத்தி வருகிறார். அவர் அங்கு வேலை செய்யும் தொழிலாளி ஒருவருக்கு சம்பள உயர்வு கொடுக்க மறுத்ததாக தெரியவருகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த ஊழியர், தனது முதலாளியை பழி வாங்க திட்டம் தீட்டினார். அந்தத் திட்டத்தின்படி, முதலாளி டெல்லியை நோக்கி சென்ற சமயத்தில், வழிமறித்து வழிப்பறி செய்துள்ளார். அப்போது அவரிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் பணத்தினை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.

The shocking thing that the worker did to the employer who did not pay the salary increase
The shocking thing that the worker did to the employer who did not pay the salary increase!

 

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த கட்டுமான நிறுவன முதலாளி, இது குறித்து காவல்துறையிடம் புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் விசாரித்த காவல்துறையினர் அந்த ஊழியரை கையும் களவுமாக பிடித்தனர். பிறகு அவரை கைது செய்ததோடு மட்டுமல்லாமல் அவரிடம் இருந்த 10 லட்சம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்து அந்த ஊழியரை சிறையில் அடைத்தனர்.

author avatar
Parthipan K