க/ பெ ரணசிங்கம் படம் போல் நடந்துள்ள உண்மை சம்பவம்!

0
86

க/ பெ ரணசிங்க படத்தில் வரும் கதையைப் போலவே உண்மையான சம்பவம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை அருகே வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்ற கணவர் இறந்து, அதை அந்த நாட்டிலுள்ள கட்டுமான நிறுவனம் சொல்லாமல் மறைப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை அருகே டி ஆலங்குளத்தை சேர்ந்தவர் ராஜேஷ்வரன் வயது 35. இவருக்கு சவுந்தரம் என்ற மனைவி வயது 25 ஜெகதீஸ்வரன் வயது 5, யோகேஸ்வரன் வயது 3 இரண்டு மகன்களும் உள்ளனர்.

 

குடும்ப சுமை காரணமாக கடன் வாங்கி 2018 ஜூன் மாதம் சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்குள்ள கட்டுமான நிறுவனத்தில் கம்பி கட்டும் வேலை செய்து வந்துள்ளார். கடந்த ஜூன் 2 ஆம் தேதி கான்கிரீட் தடுப்பு சுவர் விழுந்து அவர் இறந்து உள்ளார்.

 

ராஜேஸ்வரன் இறந்ததை ராஜேஸ்வரனின் நண்பர் அவரது குடும்பத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உண்மையை சொல்லியுள்ளார். ஆனால் அந்த கட்டுமான நிறுவனம் அதை மறைத்துள்ளது.

 

இதையடுத்து இறந்த தன் கணவர் உடலையும் மீட்டு, கட்டுமான நிறுவனத்துடன் நிவாரண உதவி தொகை வாங்கித் தருமாறு தனது இரண்டு கைக் குழந்தைகளுடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.

 

இதுகுறித்து ராஜேஸ்வரன் மனைவி செளந்தரம் கூறியது, தனது கணவர் சவுதி சென்று மூன்று ஆண்டுகளாகிவிட்டது. ஒரு முறையாவது அவர் முகத்தை பார்க்க வேண்டும். உடலை மீட்டு இந்தியா கொண்டு வர வேண்டும் என்று கண்ணீர் மல்க அவர் கூறியது மனதை ரணமாக்கியது.

 

author avatar
Kowsalya