அந்த விஷயத்திற்கு தன்னை  அழைத்த தயாரிப்பாளர்! பேட்டியில் மனம் திறந்த கடல் பட நடிகை! 

0
97
The producer who invited himself to that matter! The actress opened her heart in the interview!
The producer who invited himself to that matter! The actress opened her heart in the interview!

அந்த விஷயத்திற்கு தன்னை  அழைத்த தயாரிப்பாளர்! பேட்டியில் மனம் திறந்த கடல் பட நடிகை!

கும்கி திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு வந்தவர் நடிகர் விக்ரம் பிரபு.இவர் மிகப்பெரிய குடும்பத்தில் இருந்து வாரிசு நடிகராக சினிமாவிற்கு அறிமுகம் ஆனவர்.அண்மையில் வெளிவந்த பொன்னியன் செல்வன் திரைப்படத்தில் நடித்திருகின்றார்.மேலும் இவர் முதன் முதலில் நடித்த கும்கி படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.ஆனால் அதற்கு அடுத்ததாக நடித்த படங்கள் ஒன்றும் வெற்றி வாய்ப்பை தரவில்லை.

அந்த வகையில் அவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் இவன் வேற மாதிரி,இந்த படம் ஆக்சன் திரில்லர் பாணியில் வெளிவந்தது.மேலும் இந்த படம் ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது.இந்த படத்தில் ஹீரோயினிற்கு அம்மாவாக நடித்தவர் ஷர்மிளா ,இவர் மலையாள திரைப்படத்தில் 1994 ஆம் ஆண்டும் கடல் என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் இவர்  தமிழ் மொழிகளிலும்  ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

அண்மையில் இவர் ஒரு பேட்டியில் கூறியதாவது ஒரு படத்தில் இவருக்கு அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை இருந்ததாக கூறியுள்ளார். ஒரு படத்தில் நடித்து கொண்டிருந்த போது அந்த படத்தின் தயாரிப்பாளர்களாக மூன்று இளைஞர்கள் இருந்துள்ளனர்.ஆரம்பகட்டத்தில் அவர்கள் ஷர்மிளாவை பார்த்து அக்கா என்று கூறி இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

மேலும் அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.அதன்பிறகு இரண்டு நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.மூன்றாவது நாள் படப்பிடிப்பின் போது தயாரிப்பாளர்கள் மூவரும் இவரிடம் வந்து எங்களில் ஒருவரை நீங்கள் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளனர்.அதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஷர்மிளா இன்னும் சில நாட்களில் என் பையனே உங்கள் அளவிற்கு வளர்ந்து விடுவான்.

நான் உங்கள் அம்மாவிற்கு சமம் இவ்வாறு என்னிடம் அநாகரிகமாக நடந்து கொள்ளாதீர்கள் என்று அறிவுரை கூறியுள்ளார்.அதனை கேட்காதாந்த மூவரும் எங்களை அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்தி படுக்கைக்கு அழைத்தனர் என கூறினார்.

மேலும் அவர்களுக்கு 25 வயது தான் இருக்கும் எனக்கோ 40வயது ஆகின்றது வயது வித்தியாசம் இல்லாமல் இப்படி கேட்பது வருத்தம் தருகின்றது என தெரிவித்தார்.மேலும் அந்த படத்தில் இருந்து விலகி விட்டேன் இந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Parthipan K