கணவன் மனைவி இடையே சென்ற காவலர்! அதனால் அவரது சட்டையை கிழித்து கணவன் அராஜகம்!

0
87
The policeman who went between husband and wife! So tearing his shirt is husband anarchy!
The policeman who went between husband and wife! So tearing his shirt is husband anarchy!

கணவன் மனைவி இடையே சென்ற காவலர்! அதனால் அவரது சட்டையை கிழித்து கணவன் அராஜகம்!

திருவேற்காடு செல்லியம்மன் நகரைச் சேர்ந்தவர் தேவி. தனது கணவன் கார்த்திக் குடி போதையில் தன்னை அடித்து, கொடுமைப்படுத்துவதாக நேற்றிரவு திருவேற்காடு போலீஸ் நிலையத்தில் தகவல் ஒன்றை அளித்துள்ளார். எனவே இந்த குடும்ப சண்டையை விசாரிக்க அங்கிருந்த தலைமை காவலர் தேவராஜ் என்பவர் தேவியின் வீட்டிற்கு சென்றார்.

அவரது வயது நாற்பத்தி நான்கு. அப்போது அளவுக்கு அதிகமாக குடித்து மது போதையில் இருந்த தேவியின் கணவன் கார்த்திக்கிடம் போலீசார் மடக்கி கேள்வி கேட்டபோது குடிபோதையில் இருந்ததன் காரணமாக, போலீசாரை கீழே தள்ளி அவரது சட்டையைப் பிடித்து இழுத்து கீழே தள்ளி ஒரே அட்டகாசம் செய்துள்ளார் கார்த்திக்.

அதன் காரணமாக குடிபோதையில் இருந்த அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து போலீசார் பாணியில் விசாரணை செய்து வருகின்றனர்.