தொழில்நுட்ப கோளாறு!! 137 பயணிகளுடன் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!!

0
141
#image_title

தொழில்நுட்ப கோளாறு!! 137 பயணிகளுடன் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!!

பெங்களூருவில் இருந்து வாரணாசி நோக்கிச் சென்ற இண்டிகோ விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தெலுங்கானாவில் உள்ள ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் தகவலின் படி , பெங்களூரில் இருந்து வாரணாசி செல்லும் இண்டிகோ விமானம் 137 பயணிகளுடன் இன்று காலை 6.15 மணியளவில் தெலுங்கானாவில் உள்ள ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.

அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Savitha