வீடியோ கேம்மால் ஏற்ப்பட்ட விபரீதம்! பள்ளி மாணவி தற்கொலை!

0
110

வீடியோ கேம்மால் ஏற்ப்பட்ட விபரீதம்! பள்ளி மாணவி தற்கொலை!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள துளுக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் லாறி பட்டறை மெக்கானிக்காக கர்நாடக மாநிலத்தில் தங்கி பணி புரிந்து வருகிறார்.இவரின் மனைவி பரிமளா கூலி வேலை செய்து வருகிறார்.இவர்களுக்கு 15 வயதில் ஹரிணி ஶ்ரீ என்ற மகள் உள்ளார் .இவர் அதே பகுதியில் உள்ள ஒன்றிய பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் கடந்த பத்தாம் தேதி செல்போனில் கேம் விளையாடி கொண்டிருந்தார்.செல்போனை அதிகமாக பயன்படுத்தி இருந்ததாக கூறப்படுகிறது.அதனை கவனித்த மாணவியின் தயார் பரிமளா இப்போது அதிகமாக செல்ஃபோன் பயன்படுத்தி வருகிறாய் என கண்டித்து உள்ளார்.தயார் கண்டித்ததும் கோபம் அடைந்த மாணவி அறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். அதனை அறிந்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சேர்த்தனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு மாணவி ஹரிணி ஶ்ரீக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து ஆத்தூர் டவுன் போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அந்த தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
Parthipan K