இறுதி அஞ்சலி செய்யும் பொழுது கண் விழித்த நபர்! அலறி அடித்துக் கொண்டு ஓடிய உறவினர்கள்!!

0
112
#image_title

இறுதி அஞ்சலி செய்யும் பொழுது கண் விழித்த நபர்! அலறி அடித்துக் கொண்டு ஓடிய உறவினர்கள்!

மத்திய பிரதேச மாநிலத்தில் இறந்ததாக நினைத்து இறுதிசடங்கு செய்யும் பொழுது கண் விழித்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மத்திய பிரதேச மாநிலம் மொரேனா பகுதியை சேர்ந்த ஜீது பிரஜாபதி என்பவர் கடந்த 30ம் தேதி திடீரென்று மயங்கி விழுந்த நிலையில் வெகு நேரம் ஆகியும் அவர் எழுந்திருக்காத காரணத்தால் அவர் இறந்துவிட்டார் என்று அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நினைத்தனர்.

ஜீது பிரஜாபதி அவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்வதற்கான ஏற்படுகளை உறவினர்கள் மேற்கொண்டனர். மாலை போட்டு அஞ்சலி செலுத்தும் போது திடீரென்று அவர் கண் விழித்துள்ளார். இதையடுத்து குடும்பத்தினர் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர். சுற்றி இருந்த உறவினர்களும் மற்றும் பலரும் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.

இதையடுத்து உடனே மருத்துவரை அழைத்து ஜீது பிரஜாபதி அவர்களை மருத்துவர் சோதித்து பார்த்தார்.  கைகள் அசைவின்றி இருந்த ஜீது பிரஜாபதி உயிருடன் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மயக்க நிலையில் இருக்கும் ஜீது பிரஜாபதி அவர்களை சிகிச்சைக்காக குவாலியரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஜீது பிரஜாபதி அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.