உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! பாடத்திட்டத்தில் இதனை உடனடியாக சேர்க்க வேண்டும்! 

0
123
The order issued by the High Court! This should be included in the curriculum immediately!
The order issued by the High Court! This should be included in the curriculum immediately!

உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! பாடத்திட்டத்தில் இதனை உடனடியாக சேர்க்க வேண்டும்!

உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் ராஜரத்தினம் என்பவர் கடந்த 2015 ஆம் ஆண்டு பொதுநல வழக்கு ஒன்றை தொடுத்தார்.அந்த வழக்கானது தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடத்திட்டத்தில் 1330 குறள்களையும் சேர்க்க வேண்டும் என்பது தான்.அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் திருக்குறளில் இடம்பெற்றிருந்த அறத்துப்பால் ,பொருட்பால் இரண்டையும் பாடத்திட்டத்தில் சேர்க்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டனர்.

அந்த உத்தரவை தொடர்ந்து பள்ளிக்கல்வி இயக்குநர் ,மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு தமிழக அரசு உத்தரவிட்டது.ஆனால் நீதிமன்ற உத்தரவை அரசு செயல்படுத்தவில்லை எனவும் 6 ஆம் முதல் 12 ஆம் வகுப்பு வரை வகுப்புகளில் திருக்குறளின் 108 அதிகாரங்களை சேர்க்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

108 அதிகாரங்களில் உள்ள 1330 திருக்குறள்களையும் மாணவர்கள் முறையாக கற்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் உடனடியாக இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசிற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author avatar
Parthipan K