உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! கோவில்களில் இனி யாருக்கும் முதல் மரியாதை கிடையாது!

0
92
The order issued by the High Court! No one has first respect in temples anymore!
The order issued by the High Court! No one has first respect in temples anymore!

உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! கோவில்களில் இனி யாருக்கும் முதல் மரியாதை கிடையாது!

சிவகங்கையை சேர்ந்த பாலசுந்தரம் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் சிவகங்கை மாவட்டம் சிங்கனம்புணரி தாலுகா மல்லாக்கோட்டையில் சண்டி வீரன் சாமி மற்றும் பெரிய கோட்டை மூத்தையனார் என்ற இரண்டு பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளது.இந்த கோவில்களில் ஆண்டுதோறும் தைத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த சில வருடங்களாக சசிதுரைபாண்டி என்பவர் தனக்கு முதல் மரியாதை செய்ய வேண்டும் என பூசாரிகளை வற்புறுத்தி வருவதோடு அவருடைய ஆட்களுடன் திருவிழாவிற்கு வரும்பொழுது குடை பிடிப்பது,பரிவட்டம் கட்டுவது தலைப்பைகை அணிந்து கொண்டு கூட்டத்தில் நடந்து செல்வது போன்ற செயல்களை செய்து வருகின்றார்.

அதனால் கோவில்களில் யாருக்கும் முதல் மரியாதை கூடாது.இதனை மீறி முதல் மரியாதை கேட்டால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.மேலும் இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இது போன்ற வழக்குகள் முன்னதாகவே வந்துள்ளது.கோவில் என்றாலே அனைவருக்கும் சமமான ஒன்றுதான்.அங்கு அனைத்து மக்களும் சமம் தான்.

அதனால் கோவிலில் யாருக்கும் முதல் மரியாதை செய்யக்கூடாது,பரிவட்டம் தலைப்பாகை,குடை பிடிப்பது போன்ற எந்த ஒரு முதல் மரியாதையும் செய்ய கூடாது.யாரும் தனக்கு முதல் மரியாதை வழங்க வேண்டும் என வற்புறுத்தக்கூடாது.மேலும் கோவில் விழாவை அமைதியான முறையில் நடத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

author avatar
Parthipan K