இன்று டும் டும் டும் அடிக்க இருந்த புது மாப்பிள்ளைக்கு மர்மநபர்கள் ஊதிய சங்கு! காவல் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்!

0
85
The new groom who was supposed to play tum tum today was paid by the mysterious people. Relatives besieged the police station!
The new groom who was supposed to play tum tum today was paid by the mysterious people. Relatives besieged the police station!

இன்று டும் டும் டும் அடிக்க இருந்த புது மாப்பிள்ளைக்கு மர்மநபர்கள் ஊதிய சங்கு! காவல் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்!

தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே உள்ள பொட்டல்காடு கிராமத்தை சேர்ந்தவர்  ஜெகதீஷ் (27) .இவர் உப்பளத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு நிச்சயம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று பொட்டல்காடு கிராமத்தில் உள்ள அவருடைய வீட்டில் பந்தல் அமைத்து திருமணத்திற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் காலையில் இவர் தூத்துக்குடி துறைமுக சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு விபத்து ஏற்பட்டது என முத்தையாபுரம் போலீசார்க்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜெகதீஷ் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த சம்பவம் குறித்து அவருடைய குடுபத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் அவர் சென்ற மோட்டர்சைகளில் இந்த வீத சேதமும் இல்லை எனவும் புது மாப்பிளை ஜெகதீஷ் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி முத்தையாபுரம் காவல் நிலையத்தை ஜெகதீஷ் உடைய உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

மேலும் அவர் சென்று கொண்டிருந்த சாலையில் உள்ள சிசிடிவி  கேமராக்களை பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் புது மாப்பிள்ளை மரணம் அடைந்த சம்பம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Parthipan K