திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடத்தனுரை ஜாதி பெயர் கூறி வெளியே அனுப்பிய மேலாளர்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

0
110
The manager who sent out the caste name of Dukanurai in Tiruchirappalli district! A lot of excitement in the area!
The manager who sent out the caste name of Dukanurai in Tiruchirappalli district! A lot of excitement in the area!

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடத்துனரை ஜாதி பெயர் கூறி வெளியே அனுப்பிய மேலாளர்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருச்சி இடுமலைப்பட்டி புதூர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் பேருந்து நடத்துனராக பணியாற்றி வருபவர் ராஜேந்திரன். மேலும் இவர் கடந்த இருபதாம் தேதி இரவு தன்னுடைய பணியை முடித்துவிட்டு எடமலைப்பட்டி புதூரில் உள்ள போக்குவரத்து கழக அலுவலகத்திற்கு தனது கணக்குகளை ஒப்படைக்க சென்றார். ஹலோ அப்போது இரவு நேர பணியில் இருந்த கிளை மேலாளர் சேகர் என்பவர் ராஜேந்திரனிடம் ஓவர் டைம் பார்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் அதற்கு ராஜேந்திரன் தனக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதாகவும் அதனால் ஓவர் டைம் பார்க்க முடியாது எனவும் மறுப்பு தெரிவித்து அங்கிருந்து சென்றுள்ளார். மேலும் வழக்கம் போல் நேற்று காலை மீண்டும் பணிக்கு வந்துள்ளார். அப்போது எடமலைப்பட்டி புதூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் இருந்த மேலாளர் சேகர் ராஜேந்திரனை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு ராஜேந்திரனின் சாதியின் பெயரை கூறி திட்டி வெளியே அனுப்பி உள்ளார். இந்த தகராறு குறித்து ராஜேந்திரன் எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
Parthipan K