மகன்கள் மற்றும் மனைவியை வெட்டி கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய நபர்! கேரளாவில் அதிர்ச்சி!

0
82
The man who hacked his sons and wife to death and hanged himself! Shock in Kerala!
The man who hacked his sons and wife to death and hanged himself! Shock in Kerala!

மகன்கள் மற்றும் மனைவியை வெட்டி கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய நபர்! கேரளாவில் அதிர்ச்சி!

கேரள மாநிலத்தில் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை அருகே உள்ள ஒரு பகுதிதான்  நீலஸ்வரம். இங்கு ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற 40 வயது மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். 50 வயதான ராஜேந்திரன் அங்கேயே ஆட்டோ ஓட்டி வருகிறார். மூத்த மகன் ஆதித்ய ராஜ் என்ற 24 வயதுடைய மகனும், அமிர்தராஜ் என்ற இந்த பகுதியில் உள்ள ஒரு மளிகைக்கடையில் வேலை செய்து வருகிறான் இந்நிலையில் 20 வயது மகனும் உள்ளனர்.

அமிர்த ராஜ் அருகிலேயே ஒரு மளிகை கடையில் வேலைக்கு சென்று வந்து கொண்டுள்ளான். இந்நிலையில் நேற்று காலை 11 மணி ஆகியும் அந்த பையன் வேலைக்கு வரவில்லை என்பதன் காரணமாக கடையின் உரிமையாளர், அருகில் உள்ள ராஜேந்திரனின் வீட்டுக்கு வந்தார். அங்கு சென்று பார்த்தபோது கதவு திறந்தே இருந்தது. அதன் காரணமாக அவர் உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது அவர் அதிர்ச்சி அடைந்ததோடு வெளியே வந்து அனைவரிடமும் விஷயத்தைக் கூறினார். அங்கே ராஜேந்திரன் முன்பகுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அடுத்து அருகிலேயே மனைவி மற்றும் மகன்கள் படுகாயங்களுடன் அரிவாளால் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்கள். உடனடியாக அவர்கள் எல்லோரும் கொல்லம் மாவட்ட எஸ்பிக்கு புகார் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது போலீசார் நடத்திய விசாரணையில் அந்த ராஜேந்திரன் குடும்பத்திற்கு கடன் தொல்லை எதுவும் இல்லை என்றும் தெரிகிறது. கணவன் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களையும் அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு, அதன் பின் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.