பாமக முக்கிய புள்ளி சரமாரியாக வெட்டி கொலை! கலக்கத்தில் கட்சி தலைமை!

0
95
The main point of Pamaka was cut and killed by barrage! Party leadership in turmoil!
The main point of Pamaka was cut and killed by barrage! Party leadership in turmoil!

பாமக முக்கிய புள்ளி சரமாரியாக வெட்டி கொலை! கலக்கத்தில் கட்சி தலைமை!

விழுப்புரம் மாவட்டத்தில் கம்பியாம்புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் தான் ஆதித்யன். இவர் விழுப்புரம் மாவட்டத்தில் பாமக துணை செயலாளராக பதவியில் உள்ளார். இவருக்கும் இவருடைய உறவினர்களுக்கும் மணல் எடுப்பதில் பல நாட்களாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இவர் அவரது உறவினர்களை மணல் எடுக்க அனுமதிப்பதில்லை. இதனை நினைத்து இவரை கொலை செய்ய அவரது உறவினர்கள் திட்டமிட்டு உள்ளனர்.

அந்த வகையில் இவர் பனயபுரத்தில் தனியாக இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்பொழுது இவருக்கு பின்புறத்தில் ஐந்து பேர் கொண்ட கூலிப்படை இவரை தொடர்ந்து பின்பற்றி வந்துள்ளது. சந்தேகம் அடைந்த இவர் உடனே இரு சக்கர வாகனத்தை கீழே போட்டுவிட்டு ஓடி உள்ளார். அந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் உடனடியாக இவரை மறித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். அவ்வாறு தாக்கியதில் பல இடங்களில் வெட்டு காயம் பட்டு சாலையிலேயே சரிந்து விழுந்தார்.

சம்பவ இடத்திலேயே அவரது உயிர் பிரிந்துவிட்டது.அங்கிருந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அச்ச சுற்று வட்டார காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். மாவட்ட பாமக செயலாளர் கொலை செய்யப்பட்டதை அடுத்து போலீசார் ஐந்து பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது.மேலும் அந்த கூலிப்படையை தேடி வருகின்றனர். இவர்களின் முதற்கட்ட விசாரணையில் உறவினர்கள் தான் இவரை கொலை செய்ய திட்டமிட்டு இருந்தது தெரிய வந்துள்ளது.