முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதியை ஏமாற்றிய போலி மாற்றுத்திறனாளி வினோத் பாபுவின் லீலைகள்

0
168
போலி மாற்றுத்திறனாளி வினோத் பாபுவின் லீலைகள்
போலி மாற்றுத்திறனாளி வினோத் பாபுவின் லீலைகள்

முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதியை ஏமாற்றிய போலி மாற்றுத்திறனாளி வினோத் பாபுவின் லீலைகள்

ராமநாதபுரத்தை சேர்ந்த வினோத் பாபு என்ற போலி மாற்றுத்திறனாளி கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்றுள்ளதாக  கோப்பையை காட்டி முதல்வர் ஸ்டாலினை ஏமாற்றியயுள்ளார்.

மேலும் ராமநாதபுரத்தை சேர்ந்த வினோத் பாபு சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் இந்திய அணி கேப்டன் என சொல்லி அந்த பகுதி மக்களையும் ஏமாற்றியுள்ளார்.

இந்தநிலையில் போலி மாற்றுத்திறனாளி வினோத் பாபு சொல்வதெல்லாம் பொய் என்று தமிழக அரசுக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

புகார்களை ஆராய்ந்து பார்த்தததில் மேற்கு வங்கம் ஜான்பூரில் நடந்த வீல் சேர் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு விளையாடிய வினோத் பாபு அதை வீடியோ எடுத்து மோசடி செய்ததாக தகவல்கள் வெளியானது .

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் ஒட்டுமொத்த அரசியல் புள்ளிகளையும் ஏமாற்றியது தான்.  போலி மாற்றுத்திறனாளி வினோத் பாபுவை பலரும் கிண்டல் செய்து வருகின்றன.

இதற்கிடையில் வீல் சேர் கிரிக்கெட் வீரர் என கூறிய வினோத் பாபுவின் மீது 406, 420 வழக்கு பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Parthipan K