தமிழகத்தில் அதிகரித்து வரும் கள்ளச்சாரய உயிரிழப்பு! வேலூரில் ஒருவர் உயிரிழப்பு!!

0
129
#image_title
தமிழகத்தில் அதிகரித்து வரும் கள்ளச்சாரய உயிரிழப்பு! வேலூரில் ஒருவர் உயிரிழப்பு!!
தமிழகத்தில் கள்ளச்சாரயத்தினால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் வேலூர் மாவட்டத்தில் கூலித் தொழிலாளி ஒருவர் கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்த சம்பவம் வேலூர் மாவட்டத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் 13 பேர் உயிரிழிந்துள்ள நிலையில் தமிழகத்தில் கள்ளச்சாரயம் கலாச்சாரத்தை ஒழிக்க பல அதிரடி நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகின்றது. இந்த சம்பவம் குறித்து கட்சி தலைவர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் கூலித் தொழிலாளி ஒருவர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்துள்ள சம்பவம் வேலூர் மாவட்டத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி குமரேசன் அவர்கள் நேற்று பணி முடிந்து வீடு திரும்பும் வழியில் கள்ளச்சாராயம் குடித்துள்ளார். இதையடுத்து சில மணி நேரங்களில் வாந்தி மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்தார்.  ஏற்கனவே விழுப்புரம் மாவட்டத்தில் 13 பேர், செங்கல்பட்டில் 5 பேர் என மொத்தம் 18 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்துள்ள நிலையில் வேலூரில் கூலித் தொழிலாளி குமரேசன் அவர்கள் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்துள்ள சம்பவம் மேலும் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.