மனைவி சடலத்தை கணவன் கட்டியணைத்து படுத்த சம்பவம்!.. கொலையா?நாடகமா?

0
97
The incident where the husband tied up his wife's corpse!.. Is it murder? Drama?
The incident where the husband tied up his wife's corpse!.. Is it murder? Drama?

மனைவி சடலத்தை கணவன் கட்டியணைத்து படுத்த சம்பவம்!.. கொலையா?நாடகமா?

சூளைமேடு நமச்சிவாயபுரம் பகுதியை சேர்ந்தவர் தான்பழனி. இவரின் வயது 31.இவரது மனைவி பாரதி இந்த தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். கார் ஓட்டுநராக வேலை செய்து வந்தார் பழனி. கடந்த சில மாதங்களாக எவ்வித வேலைக்கு செல்லாமல் வீட்டிலே இருந்தார்.

இதனை மனைவி அவ்வபோது தட்டிக் கேட்டுள்ளார். இதை காதில் போட்டுக் கொள்ளாமல் வீட்டிலேயே சாப்பிட்டு விட்டு தூங்கிப்படியே இருந்தார். இதனால் கடன் அதிகமானதே என்று பாரதி டீக்கடை ஒன்றில் கடந்த ஒரு மாதமாக பணிபுரிந்து வந்தார்.அந்த டீக்கடையில் ஏராளமானோர் வந்து செல்வதுமாக இருந்தனர்.

இதனால் மனைவி பாரதி மீது சந்தேகம் அடைந்த பழனி வேலைக்கு செல்லக்கூடாது என கூறினார். குடும்ப கஷ்டங்களை அறிந்த மனைவியோ நான் வேலைக்கு செல்வேன் என்று உறுதியாக நின்றார். போகக்கூடாது என கணவன் கூறினார் இதனால் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பிறகு நேற்று காலையில் மனைவி வேலை செய்யும் டீக்கடைக்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். இங்கு எதற்கு வந்தாய் வீட்டிற்கு போ என மனைவி சொன்னார். போக மாட்டேன் என்று அந்த டீக்கடையில் அடம்பிடித்து சண்டையிட்டுள்ளார்.

பிறகு மனைவி பழனியை பிடித்து வெளியே தள்ளியுள்ளார். கோபமடைந்த கணவன் பாரதி தலையை பிடித்து சுவற்றில் இடித்து கீழே தள்ளி உள்ளார். கீழே விழுந்த நிலையில் திடீரென அவரது தலையில் இருந்து ரத்தம் கசிய தொடங்கியது.

அந்த அதிர்ச்சியில் பாரதியை கட்டியணைத்து அருகில் படுத்துக்கொண்டார் அவரது கணவன். அருகில் இருந்த நபர்கள் பாரதியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பாரதி உயிரிழந்தார்.

இதனால் அந்த டீக்கடை முழுவதும் பரபரப்பு ஏற்பட்டு வந்தது. கணவனே தன் மனைவியை சுவரில் அடித்து கொன்ற செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தது.

author avatar
Parthipan K