ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து அரங்கேறி வரும் சம்பவம்! மேலும் இரண்டு வாலிபர் கைது!

0
146
The incident that continues to take place in Erode district! Two more teenagers arrested!
The incident that continues to take place in Erode district! Two more teenagers arrested!

ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து அரங்கேறி வரும் சம்பவம்! மேலும் இரண்டு வாலிபர் கைது!

ஈரோடு கடந்த சில தினங்களாக பல்வேறு இடங்களில் பெண்களிடம் வழிப்பறி, நகை பறிப்பு போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க ஈரோடு டவுன் போலீஸ்சூப்பிரண்டு ஆனந்தகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும் தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் ஈரோட்டில் வாகனத்தை அருகே ஈடுபட்டிருந்தனர் அப்போது அந்த வழியாக இரண்டு வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். அவர்களை நிறுத்தி சோதனை நடத்தினார்கள் அப்போது சோதனையில் நாமக்கல் மாவட்டம் கவுண்டன்பட்டி குட்டை தெருவை சேர்ந்த ஜெயக்குமாரின் மகன் மணிகண்டன் (27). நடராஜபுரம் நாலாவது வீதியை சேர்ந்த பொன்னுசாமியின் மகன் தமிழ்செல்வன் (21) என்பது தெரியவந்தது.

மேலும் அவர்கள் இரண்டு பேரும் கடந்த மாதம் ஈரோட்டில் ரெண்டு பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.இதை  தொடர்ந்து இரண்டு  பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து  7 பவுன் நகையை மீட்டனர். மேலும் அவர்களிடமிருந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து கொண்டன பின்னர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
Parthipan K