மனைவியை கொலை செய்து விட்டு துணியால் மூட்டை கட்டி அதற்குள் ஒழித்து வைத்து நாடகமாடிய கணவன்!!..

0
142
The husband who killed his wife and wrapped her in a cloth and got rid of it!!..
The husband who killed his wife and wrapped her in a cloth and got rid of it!!..

மனைவியை கொலை செய்து விட்டு துணியால் மூட்டை கட்டி அதற்குள் ஒழித்து வைத்து நாடகமாடிய கணவன்!!..

ராணிப்பேட்டை போட்டுத்தாக்கு பெரிய தெரு பகுதியை சேர்ந்தவர் ராமு. இவருடைய மனைவி சரிதா இவர்களுக்கு திருமணம் ஆகி பத்து ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் அவர்களுக்கு குழந்தை இல்லை.இதனால் இவர்கள் இருவருக்கும் அவ்வப்போது சண்டை ஏற்படும்.மேலும் சரிதா நடத்தையின் மீது சந்தேகம் அடைந்த கணவன் ராமு அவரை அடித்தும் துன்புறுத்தியும் வந்துள்ளார்.

இதனாலே கணவன் மற்றும் மனைவி இவர்கள் இருவருக்கும் சண்டை முற்றி வந்தது.இந்நிலையில் கடந்த வாரம் காவல் நிலையத்திற்கு சென்ற கணவன் ராமு தன் மனைவியை காண வில்லை என போலீசாரிடம் புகார் அளித்தார்.பின் ராமு கே.ஜி.எப் பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது.இதனை தொடர்ந்து ரத்தினகிரி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ராமு குடியிருந்த வீட்டின் உள்ளிருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

பின் காவல் துறையினர் அங்கு வந்து பார்த்த போது வீட்டில் உள்ளே இருந்த ஆழ்துளை கிணற்றிலிருந்து அழிகிய துர்நாற்றம் வீசப்படுவதை கண்டு உள்ளே இறங்கிபார்த்த போது சரிதாவின் உடல் பல துணிகளால் சுத்தப்பட்டு கயிற்றால் இறுக்கப்பட்டு சடலமாக கிடந்த அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் ராமுவை பிடித்து விசாரித்த போது மனைவின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொடூரமாக கொலை செய்து துணியால் மூட்டையாக கட்டி கிணற்றில் விசியது தெரிய வந்தது.இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

author avatar
Parthipan K