வாழைப்பூவின் மகத்துவம்! உணவில் சேர்த்துக் கொண்டால் இந்த நோய்கள் அனைத்தும் தீர்ந்துவிடும்!

0
92

வாழைப்பூவின் மகத்துவம்! உணவில் சேர்த்துக் கொண்டால் இந்த நோய்கள் அனைத்தும் தீர்ந்துவிடும்!

தற்போதுள்ள காலகட்டத்தில் உணவு முறைகள் ஊட்டச்சத்து மிகுந்ததாக இல்லாததால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றது. அவ்வாறான பிரச்சனைகளில் பித்தப்பை கல், சிறுநீரக கல் போன்றவை ஏற்படுகிறது. அதற்கு சிறந்த மருந்தாக வாழைப்பூ அமைகின்றது.முதலில் வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும்.மேலும் இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும்.

வாழைப்பூவானது இரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்த உதவுகின்றது. அது மட்டுமின்றி இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கின்றது.

இரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது. இதனால் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது.மேலும் இன்றைய உணவுமுறை மாறுபாட்டாலும், மன உளைச்சலாலும் வயிற்றில் செரியாமை வயிற்றில் புண்களை ஏற்படுத்துகிறது. இந்த புண்களை ஆற்ற வாழைப் பூவை வாரம் இரண்டு முறை உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப் புண்கள் குணமாகும்.

மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் இரத்தம் வெளியேறுதல், உள்மூலம், வெளிமூலப் புண்கள் இவற்றுக்கு சிறந்த மருந்தாக வாழைப் பூவைப் பயன்படுத்தலாம்.

வாழைப்பூ மூலக்கடுப்பு, இரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது.அதனையடுத்து சீதபேதியையும் கட்டுப்படுத்தும். வாய்ப் புண்ணைப் போக்கி வாய் நாற்றத்தையும் நீக்க வாழைப்பூ உதவுகிறது.

பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள். மாதவிடாய் காலங்களில் அதிக இரத்தப்போக்கு, அல்லது இரத்த போக்கின்மை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் நோய்கள் தீரும்.

author avatar
Parthipan K