காதலனை காண விமானத்தில் பறந்து வந்த காதலி! 2 – வது காதலுக்காக நாடகமாடி ஐடி இளைஞர் செய்த கொடூர செயல்! 

0
141
#image_title

காதலனை காண விமானத்தில் பறந்து வந்த காதலி! 2 – வது காதலுக்காக நாடகமாடி ஐடி இளைஞர் செய்த கொடூர செயல்! 

பெங்களூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அர்ச்சனா என்ற பெண் தவறி விழுந்து இறந்தார். முதலில் தற்கொலை என பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு பின்னர் விசாரணையில் திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலை என தெரியவந்துள்ளது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆதேஷ். இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார்.

இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்தவர் அர்ச்சனா தீமன் வயது 28. அர்ச்சனா விமான பணிபெண்ணாக பணிபுரிந்து வருகிறார். ஆதேசும், அர்ச்சனாவும் ஒரு டேட்டிங் ஆப் மூலம் சந்தித்து அறிமுகமாகியுள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த ஆறு மாதமாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில்  சமீப காலமாக ஆதேஷ் வேறு ஒரு பெண்ணை காதலிக்க தொடங்கி உள்ளார். இதையடுத்து அர்ச்சனா  துபாயில் இருந்து ஆதேஷை சந்திப்பதற்கு பெங்களூரு வந்துள்ளார். கடந்த சனிக்கிழமை காலை ஆதேஷ் தங்கியுள்ள  கோரமங்களா மல்லப்பா ரெட்டி லேஅவுட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு அர்ச்சனா வந்துள்ளார்.

அன்று நள்ளிரவு 12 மணி அளவில் அர்ச்சனா அடுக்குமாடி குடியிருப்பின் 4- வது மாடியில் இருந்து கீழே தவறி விழுந்து இறந்தார். முதல் கட்ட விசாரணையில் தற்கொலை என போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் அர்ச்சனாவின் பெற்றோர் மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறியதையடுத்து போலீசார் ஆதேஷை கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.

அடுக்குமாடி குடியிருப்பின் 4- வது மாடியில் இருந்து குதிப்பது எளிதான ஒன்றல்ல என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து  ஆதேஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

முதற்கட்டமாக  போலீசாரின் தீவிர விசாரணையில் ஆதேஷ் அர்ச்சனாவுடன் தகராறு ஏற்பட்டதை ஒப்புக்கொண்டார். சனிக்கிழமை இரவு அன்று ஆதேஷும், அர்ச்சனாவும் சினிமா பார்க்கச் சென்றுள்ளனர். பிறகு இருவரும் பார்ட்டியில் கலந்து கொண்டு வீடு திரும்பியுள்ளனர். வீடு திரும்பியதும் இருவருக்கும் கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது. ஆதேஷ் தன்னை ஏமாற்றி விட்டதாக அர்ச்சனா கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட சண்டையில்  ஆதேஷ் அர்ச்சனாவை  பிளாட்டில் இருந்து கீழே தள்ளிவிட்டார். இதில் அர்ச்சனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முதலில் தற்கொலையாக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு பின்னர் தீவிர விசாரணையில் கொலை வழக்காக மாற்றப்பட்டது.