முதல் தாரம் தற்கொலை இரண்டாம் தாரம் கருக்கலைப்பு! பிரபல ஹீரோ மீது பாய்ந்த வழக்கு!

0
109
The first thread is suicide, the second thread is abortion! The case against the famous hero!
The first thread is suicide, the second thread is abortion! The case against the famous hero!

முதல் தாரம் தற்கொலை இரண்டாம் தாரம் கருக்கலைப்பு! பிரபல ஹீரோ மீது பாய்ந்த வழக்கு!

போஜ்புரி என்ற திரைப்படம் பெரிய அளவில் ஹிட்டானது. இப்படத்தில் கதாநாயகனாக பவன் சிங் நடித்தார். இவருக்கு 2015 ஆம் ஆண்டிற்கு முன்பே நீலம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணமான ஓர் ஆண்டுகளிலேயே இவரது முதல் மனைவி நீலம் தற்கொலை செய்து கொண்டார். இவர் இரண்டாவதாக 2018 ஆம் ஆண்டு சிங்கு என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பு தான் இந்த பெண்ணிற்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

ஏனென்றால் நடிகர் பவன் சிங் அவரது தாயார் ஆகியோர் இந்த பெண்ணை கொடுமை செய்துள்ளனர். தினம் தோறும் நடிகர் பவன் சிங், அவரது தாயார், சகோதரி என அனைவரும் இவரை கேலி செய்வதே வழக்கமாக வைத்துள்ளனர். இதை எல்லாம் பொறுத்துக் கொண்டிருந்த இவரது மனைவி நான் கர்ப்பமாக உள்ளேன் என்று ஆசையாக பவனிடம் கூறியுள்ளார். ஆனால் அதனைப் பொருட்படுத்தாமல் இவரது தாயார் மற்றும் பவன் இருவரும் சேர்ந்து, இவரது மனைவிக்கு ஒரு மருந்தை கொடுத்துள்ளனர். அதனை குடித்ததும் இவரதும் மனைவிக்கு கருவானது கலைந்து விட்டது.

இவை அனைத்தையும் பொறுத்துக் கொண்டிருந்த இவரது மனைவியை தினம்தோறும் அடித்து துன்புறுத்தியும் வந்துள்ளனர். மேலும் இவரிடம் இருந்து 50 லட்சத்தையும் அவரது தாயார் அபகரித்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் நடிகர் பவன் சிங், அவரது தாயார், அவர் சகோதரி என அனைவரும் மீதும் இவரது மனைவி புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் என்னை தற்கொலை செய்து கொள்ள தூண்டுவதாக கூறியுள்ளார்.

தினம்தோறும் எனது கணவர் குடித்துவிட்டு தன்னை அடிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் குடும்ப நீதிமன்றத்தில் அவரது மனைவி தனது பராமரிப்பு செலவுக்காக பணம் தர கோரி விண்ணப்பித்துள்ளார். இவரது முதல் மனைவியும் இவர்கள் கொடுத்த தொல்லை பொறுக்க முடியாமல் தற்கொலை செய்திருக்க கூடும் எனக் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here