மகளை வாளியில் அடைத்த தந்தை! மனதை உலுக்கிய சம்பவம்!

0
101
The father who put his daughter in a bucket! Shocking incident!
The father who put his daughter in a bucket! Shocking incident!

மகளை வாளியில் அடைத்த தந்தை! மனதை உலுக்கிய சம்பவம்!

மதுரை ஜெய்ஹிந்த்புரம் அடுத்த சோலை அழகுபுரத்தை சேர்ந்தவர் காளிமுத்து.இவர் டெயிலர்ராக வேலை பார்த்து வருகின்றார். இவருடைய மனைவி பிரியதர்ஷினி.இவர்களுக்கு எட்டு வயதில் தன்ஷிகா என்ற மகள் உள்ளார்.பிரியதர்ஷினி பாத்திரக்கடையில் வேலை பார்த்து வருகின்றார்.இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி காளிமுத்து மகள் தன்ஷிகாவுடன்  சிவங்கையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று வருவதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து வழக்கம் போல் பிரியதர்ஷினி வேலைக்கு சென்றுள்ளார்.வேலையை முடித்து விட்டு வீடு திரும்பியுள்ளார்.அப்போது வீட்டில் கணவர் மற்றும் மகள்  இல்லாததால் கணவரின் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளார்.அப்போது அவருடைய தொலைபேசி சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.அதனால் அதிர்ச்சி அடைந்த பிரியதர்ஷினி கணவர் மற்றும் மகள் இருவரையும் காணவில்லை என ஜெய்ஹிந்த் புரம் போலீசாரிடம் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.இந்நிலையில் பிரியதர்ஷினி வீட்டில் இருந்து துர் நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் கூறினார்கள்.அப்போது பிரியதர்ஷினி போலீசாரின் உதவியுடன் வீட்டிற்குள் சென்று பார்த்தனர் அப்போது அந்த துர் நாற்றம் வீட்டில் பரண் மீது இருந்து வந்தது. அதனையடுத்து அங்கு சோதனை செய்தலில் வாளி ஒன்று இருந்தது அதனை கீழே இறக்கி பார்த்தனர்.

அதில் துணியில் சுற்றப்பட்ட நிலையில் சிறுமி தன்ஷிகா அழுகிய நிலையில் சடலமாக இருந்தார்.அதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.அதைனையடுத்து போலீசார் பிரியதர்ஷினியிடம் விசாரணை நடத்தினார்கள் அந்த விசாரணையில் கணவர் காளிமுத்து சந்தேகம் கொண்டு தினமும் தகராறு செய்வார் என கூறினார்.

காளிமுத்து மகளின் முக ஜாடை தன்னை போல இல்லை என கூறி வந்ததும் தெரியவந்து.அதனால் ஆத்திரம் அடைந்த காளிமுத்து மகளை கொலை செய்து விட்டு வாளியில் அடைத்து வைத்துவிட்டு தலைமறைவாகியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது .மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Parthipan K