மகளை மனைவி ஆக்கிய தந்தை! கோர்ட்டின் அதிரடி உத்தரவு!

0
97
The father who made his daughter his wife! Court action order!
The father who made his daughter his wife! Court action order!

மகளை மனைவி ஆக்கிய தந்தை! கோர்ட்டின் அதிரடி உத்தரவு!

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ்.இவருக்கு ஒரு மகள் உள்ளார்.இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிகடி குடும்ப தகராறு ஏற்படும். அதே போல் கடந்த 2015 ஆம் ஆண்டு கணவன் மனைவி இருவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறில் ஆத்திரம் அடைந்த சுரேஷ் அவருடைய இரண்டு வயது மகளுக்கு  பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.அதனை தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷ்யை கைது செய்தனர். மேலும் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

மேலும் அந்த தண்டனை எதிர்த்து தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என் பிரகாஷ் ஹேமலதா ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன என்பது உண்மையானது எனவும் கூறினார்கள்.அதனையடுத்து  நீதிபதிகள் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது எனவும் மனுதாரரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

author avatar
Parthipan K