பெற்ற மகளையே கொன்ற தந்தை! நடந்தது என்ன!

0
67
The father who killed his own daughter! what happened!
The father who killed his own daughter! what happened!

பெற்ற மகளையே கொன்ற தந்தை! நடந்தது என்ன!

சேலம் மாவட்டத்தில் எடப்பாடியில் உள்ள ஆதிகாட்டுரைச் சேர்ந்தவர் தான் கோபால்.அவரது மனைவி மணி.இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.அவரது மகன் பெயர் ரமேஷ் கண்ணன்.அவரது மகள் பிரியங்கா வயது (15).கோபால் சிறிது மாதம் முன் மனநலம் பாதிக்கபட்டு மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவரது மனநலம் சரியான நிலையில் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.கோபால் அவரது வீட்டிற்கு வந்ததும் அக்கம் பக்கத்தினர் அவரை பைத்தியக்காரன் என வசை பாடியுள்ளனர்.இவர்கள் பேசுவதை எல்லாம் பொருத்துகொண்டர் கோபால்.இவரது மனைவி அடிக்கடி கரும்பு வெட்டுவதற்காக வேறு ஊர்களுக்கு சென்றுவிடுவார்.

இவரது மகனும் தனது பாட்டி வீட்டில் இருந்துக்கொண்டு பேக்கரி வேலைக்கு செல்வதால் பிரியங்காவும் அவரது தந்தையும் மட்டுமே வீட்டில் வசித்து வருகின்றனர்.ஊர்களில் கூறுவது போல் இவரது மகளும் அவரது தந்தையை பைத்தியக்காரன் என கூரியிருக்கிறார்.தான் பெற்ற மகளே இவ்வாறு கூறுவதை தாங்கிக்கொள்ள முடியாமல் அவரது மகளை தரதரவென்று இழுத்து அருகில் இருக்கும் சுத்தியால் அடித்து கொன்றுவிட்டார்.

இதுகுறித்து கோபால்  அவரது தம்பிக்கு தொலைப்பேசி மூலம் நான் என் மகளை கொன்றுவிட்டேன் எனக் கூறியுள்ளார்.அவரது தம்பி அதை நம்பாமல் தொலைபேசியை துண்டித்துள்ளார்.அதன்பின் கோபால் தனது கழுத்தை பிளேடால் அருத்துக்கொண்டு தம்பி வீட்டிற்கு சென்றுள்ளார்.அதிர்ந்து போன அவரது தம்பி குடும்பத்தினர் கோபால் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர்.அங்கே பிரியங்கா ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடப்பதைக்கண்டு அதிர்ந்து போனார்கள்.

கோவமுற்ற தம்பி அவரது அண்ணனான கோபாலை திட்டி தீர்த்துள்ளார்.அவர் தன் மகளை தானே கொன்றுவிட் டதை உணர்ந்து யாரிடமும்  கூறாமல் மாடிக்கு சென்று அங்கியிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துக்கொண்டார்.இதையறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து இரண்டு சடலங்களையும் மீட்டனர்.

தந்தையே தனது மகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அம்மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.