பிக்பாக்கெட் அடித்த பிரபல நடிகை! போலீசாரிடம் வசமாக சிக்கிய அவலம்!

0
89
The famous actress who scored the pickpocket! Comfortable exposure to the police!
The famous actress who scored the pickpocket! Comfortable exposure to the police!

பிக்பாக்கெட் அடித்த பிரபல நடிகை! போலீசாரிடம் வசமாக சிக்கிய அம்பலம்!

திரையுலகில் அதிக அளவில் பிரபலம் அடையும் நடிகை மற்றும் நடிகர்கள் தான் பல குற்றங்களில் குற்றவாளியாக கைது செய்யப்படுகின்றனர். சிறு வழக்கு என தொடர்ந்து பெரிய வழக்கு வரை சினிமா பிரபலங்கள் சிக்கிக் கொள்கின்றனர்.அந்த வகையில் பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி அவரது கணவர் பல பெண்களை அழைத்து  ஆபாசமாக வீடியோ எடுத்து அதை பல கோடி ரூபாய்க்கு வெளிநாடுகளில் விற்பனை செய்ததாக அவரது கணவர் கைது செய்யப்பட்டார். அதேபோல ஷாருக்கான் மகன் மற்றும் அவரது நண்பர்கள் இரவுநேர பார்ட்டியில் கலந்து கொண்டனர்.அப்போது அந்தப் பார்ட்டியில் போதை பொருள் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தகவல்கள் வெளியான நிலையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவை சேர்ந்த 20 பேர் கொண்ட அதிகாரிகள் எம்பிரஸ் என்ற சொகுசு கப்பலை சோதனை செய்தனர். அவ்வாறு சோதனை செய்ததில் 8 பேர் கொண்ட குழுவை அதிகாரிகள் கைது செய்தனர்.அந்த எட்டு பேரில் ஷாருக்கானின் மகனும்ஒருவர்.இவர்  போதைப்பொருளை விநியோகம்செய்துள்ளார் என கைது செய்யப்பட்டது பாலிவுட்டையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வாறு திரையுலகை சேர்ந்தவர்கள் சிறிதளவு கூட அச்சமின்றி பல தவறுகளை செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அந்த வவரிசையில்  தற்பொழுது பெங்காலி நடிகை ஒருவர் போலீசாரிடம் வசமாக சிக்கி உள்ளார்.தற்போது கொல்கத்தாவில் சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெற்றது. அதில் பெங்காலி நடிகை ரூபா துட்டா என்பவர் கலந்து கொண்டார். அப்போது அந்தப் புத்தக கண்காட்சியை காண வந்தவர்களின் பர்சுகளை பிக்பாக்கெட் அடித்துள்ளார். பிக்பாக்கெட் அடித்து அதில் உள்ள பணத்தை எடுத்து விட்டு அந்த பர்ஸை தூக்கி போடும் பொழுது ஒரு போலீசார் அதனை கண்டு கொண்டார். பின்பு அவரை அழைத்து சென்று விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. ரூபா தட்டா அந்த புத்தக கண்காட் சியில் மட்டும் ரூ 70 ஆயிரம் ரூபாய்  வரை பிக்பாக்கெட் அடித்தது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி எந்தெந்த இடங்களில் மக்கள் அதிக அளவு கூட்டம் கூடுவர் என்று அவரது டைரியில் குறித்து வைத்து இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இவர் பெங்காலி மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் படம் மற்றும் நாடகங்களில் கதாநாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.