காதலித்த காதலன் திருமணம் செய்ய மறுத்ததினால் நேர்ந்த கொடூரம் !!

0
68

காதலித்த பெண் ஒருவர் , தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலனை ஆசிட் அடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

திரிபுரா மாநிலம் அகர்தலா பகுதியை சேர்ந்த 27 வயது பெண் பினாட்டா சாந்தல் என்பவர், கடந்த 8 வருடமாக அதே ஊரில் உள்ள நபர் ஒருவரை பள்ளிப்பருவம் முதல் இருவரும் காதலித்து வந்துள்ளார். பள்ளிப்படிப்பை முடித்த இருவரும் புனேவிற்கு சென்றுள்ளனர்.

அங்கு சாந்தால் என்பவர், வீட்டு வேலை செய்து வந்திருந்தார் .கடந்த 2018- ஆம் ஆண்டு சாந்தாவை புனேவிலேயே விட்டுவிட்டு காதலன் மட்டும் தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். மேலும் அடுத்த மூன்று மாதங்களில் சாந்தாளுடனான தொடர்பை முற்றிலும் துண்டிக்கப்பட்டு இருந்தது. அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் ,அந்த நண்பரை கிராமத்திற்கு வந்த போதும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை .

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த துர்கா பூஜையின் போது அந்த கிராமத்தில் மீண்டும் தனது காதலனை சந்தித்த சாந்தால் சந்தித்து, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு காதலனிடம் கேட்டாள். ஆனால், அந்த நபர் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே சாந்தால் ஆத்திரமடைந்து ஆகிட் கொண்டு அந்த நபரை தாக்கியுள்ளார்.

இதனால் அந்த நபருக்கு சுவாசப்பாதை, மூக்கு மற்றும் கண்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரை அகர்தலா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

author avatar
Parthipan K

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here