ஆசைவார்த்தை கூறி சிறுமியை சீரழித்த கொடூரன்!..தக்க தண்டனை வழங்கிய நீதிபதி!!

0
101
The cruel man who corrupted the girl by saying wishful thinking!..Judge gave the appropriate punishment!!
The cruel man who corrupted the girl by saying wishful thinking!..Judge gave the appropriate punishment!!

ஆசைவார்த்தை கூறி சிறுமியை சீரழித்த கொடூரன்!..தக்க தண்டனை வழங்கிய நீதிபதி!!

புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தான் சதீஷ். இவருடைய வயது 30.இவருடைய தொழில் மீன் பிடிப்பது. மீனவரான இவர் திருமணம் ஆனவர்.இவர் கடந்த 2016 ஆம்  ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகூறி காரில் கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதை அறிந்த சிறுமியின் தாயார் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார்.புகாரின்பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீசை கைது செய்தனர்.பின்னர் அவருடன் இருந்த சிறுமியை மீட்டனர்.10 ஆண்டு காலமாக இந்த  வழக்கு தொடர்பான விசாரணை புதுச்சேரி தலைமை கோர்ட்டு நீதிபதி ஜெ.செல்வநாதன் முன்னிலையில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் இன்று இறுதி விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பில் மீனவர் சதீஷ் மீது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த குற்றம் நிருபிக்கப்பட்டது உறுதி செய்தது.அதன்படி அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் மூன்றாயிரம் அபராதமும் விதித்தும் நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பாலமுருகன் ஆஜராகி வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K