வீட்டுக்கு மருமகளாக வந்த பெண்ணை பாலியல் இச்சைக்கு அழைத்த வெறிசெயல் கொண்ட மாமனார்!..

0
119
The crazy father-in-law who invited the daughter-in-law to the house for sexual desire!..
The crazy father-in-law who invited the daughter-in-law to the house for sexual desire!..

வீட்டுக்கு மருமகளாக வந்த பெண்ணை பாலியல் இச்சைக்கு அழைத்த வெறிசெயல் கொண்ட மாமனார்!..

நாமக்கல் மாவட்டம் வடக்கு கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயா. இவர் ஒரு மாற்றுத்திறனாளி ஆவார். இவர் திடீரென்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் தரையில் உட்கார்ந்து  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது அவர் தனக்கும் சிங்கிளாபுரத்தைச் சேர்ந்த மனோகரன் என்பவருடைய மகன் சேகருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. நாங்கள் கூட்டுக் குடும்பமாக சிங்கிளாபுரத்தில் வாழ்ந்து வந்ததாகவும் எனக்கு குழந்தை இல்லாததால் தன்னுடைய மாமனார் மனோகரன் அடிக்கடி என்னிடம் தவறாக செயலுக்கு அழைத்ததாகவும்  கூறினார்.

மேலும் இது குறித்து கணவரிடமும் மாமியாரிடமும் தெரிவித்தேன். ஆனால் மாற்றுத்திறனாளி என்று கூட பாராமல் தன்னை சூடு போட்டும் மற்றும் அடித்து  துன்புறுத்துவதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் இந்த துன்புறதலை தாங்காமல் மூன்று மாதம் தனது தந்தை வீட்டில் வசித்து வந்ததாகவும் கூறியுள்ளார்.

குறித்து ராசிபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் என்ன நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறினார். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.அதனை பெற்ற அவர் விரைவில் விசாரிப்பதாகவும் தெரிவித்தார்.

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. குழந்தை இல்லாததை காரணம் காட்டி மாற்றுதிறனாளியை தனது மாமனாரே பாலியல் இச்சைக்கு அளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Parthipan K