தனியார் கல்வியியல் கல்லூரி மீது நீதிமன்றம் கடும் குற்றச்சாட்டு!

0
118
#image_title

விருதுநகர் கலசலிங்கம் கல்லூரிக்கு ரூ5 லட்சம் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

தனியார் கல்வியியல் கல்லூரி மீது நீதிமன்றம் கடும் குற்றச்சாட்டு.

எந்த அனுமதியும் இல்லாமல் ஆசிரியர் பயிற்சி என மாணவர்கள் சேர்க்கை நடத்தியுள்ளது கல்லூரி நிர்வாகம்.

மாணவர்களிடம் மனசாட்சி இல்லாமல் கட்டணம் வசூல் செய்துள்ளனர்.

ஏமாறும் மாணவர்கள் மூலம் தனது வங்கிக் கணக்கை செழிப்பாக்கி வைத்துள்ளது கல்வி நிறுவனம்.

பாதிக்கப்பட்ட 100 மாணவர்களும் இழப்பீடு கோரி வழக்கு தாக்கல் செய்யலாம்.

100 மாணவர்களின் எதிர்காலம் கருதி வேறு கல்லூரியில் சேர்வதற்கு அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

5 லட்சம் அபராத தொகையை உயர் நீதிமன்ற மதுரை கிளை சட்டப் பணிகள் குழுவிற்கு செலுத்தவும் நீதிபதி உத்தரவு.

விருதுநகர் கலசலிங்கம் கல்வியியல் கல்லூரி செயலர் ஸ்ரீதரன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன் பிறப்பித்த உத்தரவு.

author avatar
Savitha