ஊழலை தடுக்க அரசு செய்திருக்கும் நடவடிக்கைகளை கேள்வி கேட்ட நீதிமன்றம்!

0
61
The court questioned the steps taken by the government to prevent corruption!
The court questioned the steps taken by the government to prevent corruption!

ஊழலை தடுக்க அரசு செய்திருக்கும் நடவடிக்கைகளை கேள்வி கேட்ட நீதிமன்றம்!

சென்னை வில்லிவாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் தீடீர் சோதனை நடத்தியதில் கணக்கில் வராத 70 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை அடுத்து அங்கு பணியாற்றிய சார்பதிவாளர் கோபாலகிருஷ்ணன் தூத்துக்குடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்தநிலையில் அவர் மீண்டும் சென்னைக்கு இடமாறுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து, இதை எதிர்த்து கருப்பு எழுத்து இயக்கம் என்ற அமைப்பின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டவர். மீண்டும் சென்னைக்கு மாற்றம் செய்திருப்பது ஊழலுக்கு வழிவகுக்கும் வகையில் உள்ளது. எனவே அவரது இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் பேனர்ஜி மற்றும்  நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சார்பதிவாளர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தனர். மேலும் பத்திரப்பதிவு துறையில் ஊழலை கட்டுப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.