தென்காசியை சுற்றி சுற்றி சுழன்று அடிக்கும் முறைகேடு புகார்! மீண்டும் ஒரு திடுக்கிடும் சம்பவம் அம்பலம்

0
119
#image_title

தென்காசியை சுற்றி சுற்றி சுழன்று அடிக்கும் முறைகேடு புகார்! மீண்டும் ஒரு திடுக்கிடும் சம்பவம் அம்பலம்

சங்கரன் கோவில் பகுதியிலிருந்து தேர்வெழுதியோர் குரூப் 4 ஸ்டெனோ டைப்பிஸ்ட் தேர்வில் 450 பேர் தேர்ச்சி.

3604 என்கிற தொடங்கும் பதிவெண் கொண்ட தேர்வர்கள் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் தேர்வெழுதியவர்கள் ஆவர்.

2500 ஸ்டெனொ டைப்பிஸ்ட் காலிப்பணியிடங்களில் 600 க்கும் மேல் தென்காசி மாவட்டம் முழுவதிலிருமிருந்தும் அவர்களுள்.

450 பேர் சங்கரன் கோவில் பகுதியில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில் இருந்தும் தேர்வெழுதியுள்ளனர்.

ஒரே ஊரில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களிலிருந்து தேர்வெழுதியோர் அதிகளவு தேர்சி பெற்றுள்ளதால் முறைகேடு நடந்திருக்குமோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

தேர்வு பெற்ற அனைத்து தேர்வர்களும் தென்காசியில் உள்ள குறிப்பிட்ட தனியார் பயிற்சி மையத்தில் பயின்றவர்கள் என தகவல்.

author avatar
Savitha