உயிரிழந்த கை அகற்றப்பட்ட குழந்தைக்கு இழப்பீடு வழங்க வேண்டும்… டிடிவி தினகரன் எக்ஸ் பக்கத்தில் பதிவு!!

0
38
உயிரிழந்த கை அகற்றப்பட்ட குழந்தைக்கு இழப்பீடு வழங்க வேண்டும்… டிடிவி தினகரன் எக்ஸ் பக்கத்தில் பதிவு…
சென்னையில் கை அகற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குழந்தை உயிரிழந்ததை அடுத்து குழந்தையின் பெற்றோருக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று டிடிவி தினகரன் அவர்கள் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டு தலையின் அறவு அதிகரிக்க ஆரம்பித்தது. இதனால் தலையில் உள்ள நீரை வெளியேற்றுவதற்கு குழாய் ஒன்று பொருத்தப்பட்டது. அந்த குழாய் வெளியேறியதை அடுத்து மே 25ம் தேதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அந்த  குழந்தைக்கு மாற்று குழாய் பொருத்தப்பட்டது. இதன் காரணமாக குழந்தையின் வலது கை அழுகியது. குழந்தையின் உயிரை காப்பாற்ற கடந்த ஜூலை இரண்டாம் தேதி குழந்தையின் வலது கை அகற்றப்பட்டது. பின்னர் இந்நாள் வரை தீவிர.சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கை அகற்றப்பட்ட குழந்தை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தது. இந்த செய்தியை அறிந்த அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து தமிழக அரசு உயிரிழந்த குழந்தைக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழந்தது தொடர்பாக அமமுக பொதுச் செயலாளர் டிடி தினகரன் அவர்கள் “சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி  வேதனை அளிக்கிறது.
மருத்துவர்களின் அலட்சியத்தால், மேற்சிகிச்சையின்போது குழந்தையின் கை அகற்றப்பட்டதாக குழந்தையின் பெற்றோர்கள் குற்றம்சாட்டியிருந்த நிலையில், இப்போது அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறது.
 மருத்துவத்துறை அதிகாரிகளும், அமைச்சரும் குழந்தை உயிரிழப்பு குறித்து  அளித்துள்ள பதில் ஏற்கனவே துன்பத்தில் உள்ள பெற்றோரை மேலும் துன்பத்தில் ஆழ்த்துவதுபோல் உள்ளது.
உயிரிழந்த குழந்தையின் பெற்றோருக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதுடன், பெற்றோரின் குற்றச்சாட்டை உரிய விசாரணை  நடத்தி காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றேன்” என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.