ஆணவக் கொலையாக மாற்றப்பட்ட வழக்கு! மாற்று சமூகத்திற்கு சாதகமாக வழங்கப்பட்ட தீர்ப்பு!

0
66
The case was changed to murder! Judgment given in favor of Change Society!
The case was changed to murder! Judgment given in favor of Change Society!

ஆணவக் கொலையாக மாற்றப்பட்ட வழக்கு! மாற்று சமூகத்திற்கு சாதகமாக வழங்கப்பட்ட தீர்ப்பு!

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் மாவட்டத்தையே உழுக்கும் அளவிற்கு ஒர் சம்பவம் அரங்கேறியது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகள் திலகவதி, விருதாச்சலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவரை ஒருதலையாக ஆகாஷ் என்பவர் காதலித்து வந்துள்ளார்.

ஆகாஷ் பலமுறை திலகவதியிடம் காதலை கூறியும், அவர் ஏற்க மறுத்து விட்டார். கோவமடைந்த ஆகாஷ் திலகவதி  மட்டும் வீட்டில் தனியாக இருந்த பொழுது அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இந்த கொலையை குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்பு போலீசார் ஆகாஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தார்.விசாரணையில் திலகவதியை ஆகாஷ் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்தது தெரிய வந்தது. காதலிக்க ஏற்க மறுத்ததால் தான் அவரை கொன்றதாகவும் தகவல்கள் வெளிவந்தன. மேலும் ஆகாஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கானது மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் இன்று அமரவுக்கு வந்தது.

இந்த வழக்கு விசாரணையானது கொலை என்ற பாணியில் இருந்து ஆணவக் கொலை என்ற பெயரில் அப்படியே மாற்றப்பட்டு விட்டது.ஆகாஷ் மற்றும் திலகவதி காதலித்து வந்ததுள்ளதாகவும்,ஆகாஷ் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், திலகவதி குடும்பத்தினரே அவரை கொன்று விட்டதாக ஆகாஷ் தரப்பில் கூறியுள்ளனர்.

இவ்வாறு கூறிவந்த நிலையில் கடலூர் மகிலா நீதிமன்றத்தில் நீதிபதி உத்ம ராஜா இந்த வழக்கிற்கு தீர்ப்பளித்துள்ளார்.  இந்த வழக்கில் ஆகாஷ் திலகவதியை கொலை செய்ததற்கான எந்த ஒரு ஆவணங்களும் அல்லது சாட்சிகளும் காணப்படவில்லை. அதனால் அவரை விடுதலை செய்வதாக கூறி தீர்ப்பு வழங்கியுள்ளார்.