செம்மரங்கள் கடத்திய  வழக்கு! கைதான சசிகலா உறவினர்!

0
80

செம்மரங்கள் கடத்திய  வழக்கு! கைதான சசிகலா உறவினர்!

செம்மரங்கள் கடத்திய வழக்கில் சசிகலாவின் உறவினர் பாஸ்கரனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சசிகலாவின் உறவினர் இளவரசியின் மகன் விவேக். இவர் ஜெயா டிவியின் நிர்வாக இயக்குனராக உள்ளார். இவரது மாமனார் பாஸ்கரன். சென்னை அண்ணாநகர் மேற்கில் குடியிருந்து வரும் இவர் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. செம்மர கடத்தலில் ஈடுபட்டதாக ஆந்திர போலீசார் பல்வேறு வழக்குகள் இவர் மீது பதிவு செய்துள்ளனர். செம்மரக்கட்டைகளை கடத்தி வந்ததாக தமிழக போலீசாரம் இவர் மீது வழக்குகள் பதிவு செய்துள்ளனர். குறிப்பாக செம்மர கடத்தல் வழக்கில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆந்திர போலீசார் இவரை கைது செய்தனர்.

இதனையடுத்து ஜாமினில் வெளிவந்த பாஸ்கரனின் பர்னிச்சர் கடையில் 48 கோடி மதிப்புள்ள செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் அவர் மீது மீண்டும் வருவாய் புலனாய்வுத்துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனால் அண்ணாநகரில் உள்ள பாஸ்கரன் வீட்டிற்கு நேற்று இரவு சென்ற மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் வழக்கைப் பற்றி விசாரிப்பதற்காக சென்னை தியாகராயர் நகரில் உள்ள திரை அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு வைத்து விடிய விடிய நள்ளிரவு வரை போலீஸாரால் விசாரணை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து விசாரணையின் முடிவில் பாஸ்கரன் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பாஸ்கரனை எழும்பூர் கோட்டில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here